ETV Bharat / state

"அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை ஒழிப்பதே புதிய சட்டத் திருத்தத்தின் நோக்கம்" - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!

author img

By

Published : May 4, 2023, 5:35 PM IST

நகர்ப்புறங்களில் பொது இடங்களில் விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை அடியோடு ஒழிப்பதே புதிய சட்டத் திருத்தத்தின் நோக்கம் என அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.

Minister
விளம்பரம்

சென்னை: தமிழக அரசு கடந்த மாதம் வெளியிட்ட அரசாணையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2022-ல் சில விதிகளில் மாற்றங்கள் செய்துள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, 'நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் ஈட்டும் வகையில், மேம்பாலங்கள், சுவர்கள் உள்ளிட்ட பொது இடங்களில் விளம்பர பலகைகளை வைக்க அனுமதி வழங்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி வழங்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடமிருந்து, உள்ளாட்சி அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. பொது இடங்களில் விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி வழங்கும் இந்த சட்டத்திருத்தத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த அனுமதியால், நகரங்களின் அழகு கெட்டுவிடும் என்றும், விளம்பரப் பலகைகள் சரிந்து விழுந்து விபத்துகள் ஏற்படும் ஆபத்து உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை அடியோடு ஒழிப்பதே புதிய சட்டத் திருத்தத்தின் நோக்கம் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று(மே.4) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அனுமதியில்லாமல் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளைப் பொறுத்தமட்டில், Tamil Nadu Urban Local Bodies Licensing of Hoardings and Levy and Collection of Advertisement Tax Rules, 2003 மற்றும் Chennai City Municipal Corporation Licensing of Hoardings and Levy and Collection of Advertisement Tax Rules, 2003 விதிகளின்படி, கடந்த அதிமுக ஆட்சியில் விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி, அனுமதியின்றி நிறுவப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், அதிமுக ஆட்சியிலேயே, 2018ஆம் ஆண்டில் பல்வேறு நகர்ப்புற சட்டங்களின் கீழ், விளம்பரப் பலகைகளை உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களில் மட்டும் அமைக்க ஏதுவாக, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், ஒரு சில நிறுவனங்கள் மட்டும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான நிலம் மற்றும் கட்டடங்களில் விளம்பரங்கள் செய்யும் ஏகபோக சூழல் அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

இப்படியொரு சட்டத் திருத்தத்தை எதிர்த்து, சில விளம்பர நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. அவ்வழக்கில், சட்டத் திருத்தத்திற்கு தடை விதித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக புதிய விதிகளை உருவாக்க அதிமுக அரசுக்கு உத்தரவிட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 11.03.2020அன்று ஆணை பிறப்பித்தது. அதிமுக ஆட்சி இருக்கும் வரை உயர் நீதிமன்றத்தின் மேற்படி உத்தரவு கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, மேற்படி உயர் நீதிமன்ற ஆணையின் அடிப்படையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் முழுவதும் விளம்பரப் பலகைகள் நிறுவுவதை முறைப்படுத்த, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 2022-ல் உரிய வழிமுறைகள் வகுக்கப்பட்டு, இச்சட்டம் மற்றும் விதிகள் 13.04.2023 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படை நோக்கம் அனுமதியில்லா விளம்பரப் பலகைகளை அறவே அனுமதிக்கக் கூடாது என்பதுதான். இச்சட்டத்திற்கு முரணாக வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது மட்டுமின்றி, சட்டத்தை மீறி விளம்பரப் பலகைகள் வைக்கும் உரிமைதாரர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இந்த அடிப்படையில், கடந்த 6 மாதங்களில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள் தயவு தாட்சண்யமின்றி அகற்றப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் ஆங்காங்கே சுமார் 697 விளம்பரப் பலகைகள் நீதிமன்ற தடை உத்தரவுகளால் சென்னை மாநகராட்சியால் அகற்ற இயலாத சூழலில் உள்ளன. அவற்றையும் அகற்றிட பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உரிய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகளை அடியோடு அகற்றுவதே திமுக அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்ட திருத்தத்தின் நோக்கம் என தெளிவுபடுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சித்த மருத்துவப்பல்கலைக் கழக மசோதாவிற்காக அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது - அமைச்சர் மா.சு

சென்னை: தமிழக அரசு கடந்த மாதம் வெளியிட்ட அரசாணையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2022-ல் சில விதிகளில் மாற்றங்கள் செய்துள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, 'நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் ஈட்டும் வகையில், மேம்பாலங்கள், சுவர்கள் உள்ளிட்ட பொது இடங்களில் விளம்பர பலகைகளை வைக்க அனுமதி வழங்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி வழங்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடமிருந்து, உள்ளாட்சி அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. பொது இடங்களில் விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி வழங்கும் இந்த சட்டத்திருத்தத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த அனுமதியால், நகரங்களின் அழகு கெட்டுவிடும் என்றும், விளம்பரப் பலகைகள் சரிந்து விழுந்து விபத்துகள் ஏற்படும் ஆபத்து உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை அடியோடு ஒழிப்பதே புதிய சட்டத் திருத்தத்தின் நோக்கம் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று(மே.4) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அனுமதியில்லாமல் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளைப் பொறுத்தமட்டில், Tamil Nadu Urban Local Bodies Licensing of Hoardings and Levy and Collection of Advertisement Tax Rules, 2003 மற்றும் Chennai City Municipal Corporation Licensing of Hoardings and Levy and Collection of Advertisement Tax Rules, 2003 விதிகளின்படி, கடந்த அதிமுக ஆட்சியில் விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி, அனுமதியின்றி நிறுவப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், அதிமுக ஆட்சியிலேயே, 2018ஆம் ஆண்டில் பல்வேறு நகர்ப்புற சட்டங்களின் கீழ், விளம்பரப் பலகைகளை உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களில் மட்டும் அமைக்க ஏதுவாக, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், ஒரு சில நிறுவனங்கள் மட்டும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான நிலம் மற்றும் கட்டடங்களில் விளம்பரங்கள் செய்யும் ஏகபோக சூழல் அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

இப்படியொரு சட்டத் திருத்தத்தை எதிர்த்து, சில விளம்பர நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. அவ்வழக்கில், சட்டத் திருத்தத்திற்கு தடை விதித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக புதிய விதிகளை உருவாக்க அதிமுக அரசுக்கு உத்தரவிட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 11.03.2020அன்று ஆணை பிறப்பித்தது. அதிமுக ஆட்சி இருக்கும் வரை உயர் நீதிமன்றத்தின் மேற்படி உத்தரவு கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, மேற்படி உயர் நீதிமன்ற ஆணையின் அடிப்படையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் முழுவதும் விளம்பரப் பலகைகள் நிறுவுவதை முறைப்படுத்த, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 2022-ல் உரிய வழிமுறைகள் வகுக்கப்பட்டு, இச்சட்டம் மற்றும் விதிகள் 13.04.2023 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படை நோக்கம் அனுமதியில்லா விளம்பரப் பலகைகளை அறவே அனுமதிக்கக் கூடாது என்பதுதான். இச்சட்டத்திற்கு முரணாக வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது மட்டுமின்றி, சட்டத்தை மீறி விளம்பரப் பலகைகள் வைக்கும் உரிமைதாரர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இந்த அடிப்படையில், கடந்த 6 மாதங்களில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள் தயவு தாட்சண்யமின்றி அகற்றப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் ஆங்காங்கே சுமார் 697 விளம்பரப் பலகைகள் நீதிமன்ற தடை உத்தரவுகளால் சென்னை மாநகராட்சியால் அகற்ற இயலாத சூழலில் உள்ளன. அவற்றையும் அகற்றிட பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உரிய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகளை அடியோடு அகற்றுவதே திமுக அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்ட திருத்தத்தின் நோக்கம் என தெளிவுபடுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சித்த மருத்துவப்பல்கலைக் கழக மசோதாவிற்காக அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது - அமைச்சர் மா.சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.