ETV Bharat / state

கே.சி. வீரமணி மீதான நில ஆக்கிரமிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

author img

By

Published : Oct 21, 2019, 8:02 PM IST

சென்னை: வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி மீதான நில ஆக்கிரமிப்புப் புகார் தொடர்பான வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Chennai high court on K C Veeramani case

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர், வட வேலூர் கிராமத்தில் தனது குத்தகையின் கீழிருந்த ஏழு ஏக்கர் நிலத்தை, அமைச்சர் கே.சி. வீரமணி, ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி ஆகியோர் சட்டவிரோதமாகக் கையகப்படுத்த முயற்சி செய்வதாகவும் இது தொடர்பாக தான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன், "இந்த விவாகரத்தில் வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என மாவட்டக் கண்காணிப்பாளர் முடிவெடுத்துள்ளார். புகாரின் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், உயர் அலுவலர்களிடமும் பின்னர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரலாம் என்கின்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஜெயப் பிரகாஷ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அஞ்சல் மூலம் காவல் துறைக்கு முதலில் புகார் அனுப்பிவிட்டு, உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கே உகந்ததல்ல” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்ட மாவட்டக் கண்காணிப்பாளரின் அறிக்கையை பதிவுசெய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர், வட வேலூர் கிராமத்தில் தனது குத்தகையின் கீழிருந்த ஏழு ஏக்கர் நிலத்தை, அமைச்சர் கே.சி. வீரமணி, ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி ஆகியோர் சட்டவிரோதமாகக் கையகப்படுத்த முயற்சி செய்வதாகவும் இது தொடர்பாக தான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன், "இந்த விவாகரத்தில் வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என மாவட்டக் கண்காணிப்பாளர் முடிவெடுத்துள்ளார். புகாரின் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், உயர் அலுவலர்களிடமும் பின்னர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரலாம் என்கின்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஜெயப் பிரகாஷ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அஞ்சல் மூலம் காவல் துறைக்கு முதலில் புகார் அனுப்பிவிட்டு, உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கே உகந்ததல்ல” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்ட மாவட்டக் கண்காணிப்பாளரின் அறிக்கையை பதிவுசெய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:

விக்கிரவாண்டியில் வெற்றி நிச்சயம்! -திமுக வேட்பாளர் நம்பிக்கை

Intro:Body:அமைச்சர் கே.சி வீரமணி மீதான புகார் தொடர்பாக விதிகளை பின்பற்றாமல் உயர் நீதிமன்றத்தில் நேரடியாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தமிழக அரசுத்தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர், வட வேலூர் கிராமத்தில் தனது குத்தகையின் கீழ் இருந்த 7 ஏக்கர் நிலத்தை, வணிகவரித்துறை அமைச்சர் கே.சி வீரமணி மற்றும் ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி ஆகியோர் சட்டவிரோதமாக கையகப்படுத்த முயற்சி செய்வதாகவும், இதுதொடர்பாக தான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன், வழக்கில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் தாக்கல் செய்த அறிக்கையில், இந்த விவாகரத்தில் வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என மாவட்ட கண்காணிப்பாளர் முடிவெடுத்துள்ளார்.

புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், உயரதிகாரிகளிடமும்,
பின்னர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் வழக்கு தொடலாம் என்ற உயர்நீதிமன்றத்தில் உத்தரவுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு தாக்கல்
செய்துள்ளார்.

இந்த நடைமுறைகளை பின்பற்றாமல், தபால் மூலம் காவல்துறைக்கு புகார் அனுப்பிவிட்டு, உடனடியாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கே உகந்ததல்ல எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்ட மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளரின் அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் 12 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.