ETV Bharat / state

‘ஸ்டாலின் குட்டிக்கரணம் போட்டாலும் மீண்டும் அதிமுக ஆட்சிதான்’ - அமைச்சர் ஜெயக்குமார் - ஜெயக்குமார்

சென்னை: ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தினால் தமிழ்நாட்டில் பாதிப்பு இருக்காது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

minister jayakumar press meet
author img

By

Published : Sep 4, 2019, 11:37 PM IST

சென்னை தி.நகரில் உள்ள தியாகராயர் அரங்கில் நடைபெற்ற தேசிய ஊட்டச்சத்து மாத தொடக்க விழா நிகழ்ச்சியில் சமூகநலம் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர் சரோஜா, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, “ஒட்டுமொத்த அமைச்சரவையும் வெளிநாடு பயணம் செல்லவில்லை. ஆறு அமைச்சர்கள் மட்டுமே சென்று இருக்கிறார்கள். தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக வர வேண்டுமென்று அரசு எடுக்கும் முயற்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து தெரிவித்திருந்தால் நல்லது. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசியிருக்கிறார்.

’ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’ எந்த நிலையிலும் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது. பாதிப்பு ஏற்படாத வகையில் இருந்ததால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே போல, வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கும் இலவச ரேஷன் அரிசி திட்டத்தினால் பாதிப்பு இருக்காது.

நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்தால் தாராளமாக சேர்ந்து கொள்ளட்டும். திமுக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியதன் காரணம், அதிமுகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளதை சரிசெய்வதற்காக இருக்கலாம். திமுக அமெரிக்க, ரஷ்ய அதிபர்களையே சந்தித்தாலும் ஒன்றும் நடக்காது. ஸ்டாலின் எவ்வளவு குட்டிக்கரணம் போட்டாலும், எவ்வளவு பணம் செலவு செய்தாலும் 2021இல் ஜார்ஜ் கோட்டையில் அதிமுகதான் கொடியேற்றும்" என்றார்.

சென்னை தி.நகரில் உள்ள தியாகராயர் அரங்கில் நடைபெற்ற தேசிய ஊட்டச்சத்து மாத தொடக்க விழா நிகழ்ச்சியில் சமூகநலம் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர் சரோஜா, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, “ஒட்டுமொத்த அமைச்சரவையும் வெளிநாடு பயணம் செல்லவில்லை. ஆறு அமைச்சர்கள் மட்டுமே சென்று இருக்கிறார்கள். தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக வர வேண்டுமென்று அரசு எடுக்கும் முயற்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து தெரிவித்திருந்தால் நல்லது. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசியிருக்கிறார்.

’ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’ எந்த நிலையிலும் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது. பாதிப்பு ஏற்படாத வகையில் இருந்ததால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே போல, வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கும் இலவச ரேஷன் அரிசி திட்டத்தினால் பாதிப்பு இருக்காது.

நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்தால் தாராளமாக சேர்ந்து கொள்ளட்டும். திமுக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியதன் காரணம், அதிமுகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளதை சரிசெய்வதற்காக இருக்கலாம். திமுக அமெரிக்க, ரஷ்ய அதிபர்களையே சந்தித்தாலும் ஒன்றும் நடக்காது. ஸ்டாலின் எவ்வளவு குட்டிக்கரணம் போட்டாலும், எவ்வளவு பணம் செலவு செய்தாலும் 2021இல் ஜார்ஜ் கோட்டையில் அதிமுகதான் கொடியேற்றும்" என்றார்.

Intro:Body:*ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தினால் எந்த நிலையிலும் தமிழகத்தில் பாதிப்பு இருக்காது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்*

சென்னை தி நகரில் உள்ள தியாகராயர் அரங்கில் நடைபெற்ற தேசிய ஊட்டச்சத்து மாத தொடக்க விழா நிகழ்ச்சியில் சமூகநலம் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர் சரோஜா, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியது,


ஒட்டுமொத்த அமைச்சரவையும் வெளிநாடு பயணம் செல்லவில்லை 6 அமைச்சர்கள் மட்டுமே சென்று இருக்கிறார்கள் அதுவும் துறை சார்ந்த பேசுவதற்காக சென்றிருக்கிறார்கள். தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக வர வேண்டும்அரசு எடுக்கும் முயற்சிக்கு முழுமையாக எதிர்கட்சி தலைவர் வாழ்த்து தெரிவித்து இருந்தால் நல்லது ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசியிருக்கிறார் நிச்சயமாக அவருக்கு அரசியலில் தாழ்வு தான் உயர்வில்லை. வெறுப்புணர்ச்சியின் உச்ச கட்டத்தில் தான் திமுக தலைவர் பேசுகிறார் அப்படி தான் மக்கள் பார்ப்பார்கள் என தெரிவித்தார்.

என்னென்ன புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது என்பதை அவருக்கு தேவைப்பட்டால் அதை தர தயாராக இருக்கிறோம். இதில் ஒளித்து வைத்து வைக்க வேண்டிய அவசியமில்லை திமுக ஒளித்து மறைத்து ரகசியமாக சுற்றுப்பயணம் போனார்கள்இப்போது அதௌ கேள்வி கேட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள். திமுக ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்திற்கு சொல்லாமல் பல நாடுகளுக்கு சென்று இருக்கிறார்கள் ஆனால் இன்றைக்கு ஒளிவு மறைவு இல்லாமல் வெளிநாடு சென்று இருப்பதை ரகசிய பயணம் என்று கூறுகிறார்கள்.

முதல்வர் வெளிநாடு பயணத்தால் நல்ல திட்டங்கள் வரும்,தொழில் பெருகும், வேலைவாய்ப்பு உண்டாகும். எந்த நேரத்தில் இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.
அதிமுகவின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது இதைப் பார்த்து திமுக கலங்கியுள்ளது. ஸ்டாலின் எவ்வளவு குட்டிக்கரணம் போட்டாலும் எவ்வளவு பணம் செலவு செய்தாலும் 2021ல் ஜார்ஜ் கோட்டையில் அதிமுகதான் கொடியேற்றும்.

விக்ரவாண்டி நான்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கும். நாடாளுமன்ற தேர்தலில் 18 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம் தற்போது 47 சதவீதம் ஆக மாறி இருக்கிறது. வேலூரில் திமுகவின் நிலைமை தப்பித்தோம் பிழைத்தோம் என்று தான் இருக்கிறது இது ஆரோக்கியமான நிலை இல்லை. எம்எல்ஏவை விலைக்கு வாங்கிவிடலாம், குழப்பத்தை ஏற்படுத்தலாம், ஆட்சியை  கவிழ்த்தி விடலாம் என்ற எந்த எண்ணமும் நிறைவேறாது என தெரிவித்தார்.

தொடர்ந்து ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் எந்த நிலையிலும் தமிழகத்தில் பாதிப்பு இருக்காது. பாதிப்பு ஏற்படாத வகையில் இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதே போல, வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கும் இலவச ரேஷன் அரிசி திட்டத்தினால் யாருக்கும் பாதிப்பு இருக்காது என கூறினார்.

நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்தால் தாராளமாக சேரட்டும். திமுக விஜயை சந்தித்து பேசியதன் காரணமே அதிமுகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளதை சரிசெய்வதற்காக இருக்கலாம். அமெரிக்க, ரஷ்ய அதிபர்களையே சந்தித்தாலும் ஒன்னும் நடக்காது என்றார்.

திமுக ஆட்சி காலத்தில் வெளிநாடு சென்று தமிழ்நாட்டிற்கு என்ன திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். நாங்கள் 100 மதிப்பெண் எடுத்தால் அவர்கள் 20 சதவீதம் கூட வரமாட்டார்கள் முதலீடு செய்வதற்கும் பல்வேறு வர்த்தக நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் வெளிநாடு செல்கிறார்கள். திமுகவிற்கு எத்தனை நிறுவனங்கள் எத்தனை நாட்டில் இருக்கிறது என்பதை தோண்டத் தோண்ட தான் வெளியே வரும் என கூறினார்.

மேலும், டி.கே.சிவகுமாரை முகாந்திரம் இல்லாமல் கைது செய்திருக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.