ETV Bharat / state

கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை இணைத்து பேச தனபாலுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 3:30 PM IST

Kodanad murder cum heist case: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மறைந்த ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த (மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்) ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், சமீப காலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து, அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி சென்னை உயர் நீதின்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 'கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருவதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருவதாகவும்' மனுவில் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

கோடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜாமீன் பெற்றுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று (அக்.10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆவணங்களை பதிவு செய்வதற்காக வழக்கின் விசாரணையை நவம்பர் 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், தனபாலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிரந்தர தடையாக மாற்றியமைத்தும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: “தண்ணீர் வழங்காத கர்நாடக அரசுக்கு மின் விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்” - விவசாயி நூதன போராட்டம்!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த (மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்) ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், சமீப காலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து, அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி சென்னை உயர் நீதின்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 'கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருவதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருவதாகவும்' மனுவில் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

கோடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜாமீன் பெற்றுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று (அக்.10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆவணங்களை பதிவு செய்வதற்காக வழக்கின் விசாரணையை நவம்பர் 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், தனபாலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிரந்தர தடையாக மாற்றியமைத்தும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: “தண்ணீர் வழங்காத கர்நாடக அரசுக்கு மின் விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்” - விவசாயி நூதன போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.