ETV Bharat / state

'நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்க ஆராய வேண்டும்' - முதலமைச்சர்

நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவத்துறை ஆராய வேண்டும் என மருத்துவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

author img

By

Published : Nov 15, 2022, 5:07 PM IST

’நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருத்துவத் துறை ஆராய வேண்டும்...!’ - முதலமைச்சர்
’நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருத்துவத் துறை ஆராய வேண்டும்...!’ - முதலமைச்சர்

சென்னை: ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெறும் 'சுகாதார மாநாடு - 2022'யை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், 'கல்வி, மருத்துவம் இந்த அரசின் இரு கண்கள் என்று நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அதில் மக்கள் நல்வாழ்வுத்துறை மகத்தான துறையாக தற்போது செயல்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்ட மற்றும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், அரசு தலைமை மருத்துவமனைகள் ஒருங்கிணைந்த முதல் மாநாடாக இந்த மாநாடு நடைபெறுகிறது. இதனைத் தொடங்கி வைத்து மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ''மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், சுப்புலட்சுமி மகளிர் உதவித்திட்டம் உள்ளிட்டப் பல திட்டங்கள் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையில் மக்களுக்காக செயல்பட்டு வருகிறது.

அதில் குறிப்பாக, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், இந்த மூன்று திட்டங்களும் இந்தியாவில் இதுவரையில் எந்த மாநிலத்திலும் செயல்படாத திட்டங்கள் என்பதை பெருமையுடன் சொல்கிறேன்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு மேலும் மேலும் புகழடைய வேண்டும் என்பது எனது விருப்பம். எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனையை தமிழ்நாடு செய்து வருகிறது. தடுப்பூசியிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. மேலும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.

மருத்துவ வளர்ச்சி மேம்பாட்டிலும் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்க வேண்டும்; அதற்கான திட்டம் போட வேண்டும். நோய்கள், புது அவதாரம் எடுத்து வருகிறது. அதனை வெல்லும் அளவில் இருக்க வேண்டும். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவே பல நோய்களுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

எனவே, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக அரசின் சார்பில் என்ன செய்யலாம் என்பது குறித்து திட்டமிட வேண்டும். மேலும், அரசு மருத்துவமனைக்குத் தேவையான உட்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளின் செயல்பாடுகளை அவ்வப்போது தணிக்கை செய்ய வேண்டும். தமிழ்நாடு சுகாதாரத்துறை உயரிய நிலையை எட்ட வேண்டும் என்பதே விருப்பம்' எனப் பேசினார்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவர் ரயில் மோதி உயிரிழப்பு

சென்னை: ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெறும் 'சுகாதார மாநாடு - 2022'யை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், 'கல்வி, மருத்துவம் இந்த அரசின் இரு கண்கள் என்று நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அதில் மக்கள் நல்வாழ்வுத்துறை மகத்தான துறையாக தற்போது செயல்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்ட மற்றும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், அரசு தலைமை மருத்துவமனைகள் ஒருங்கிணைந்த முதல் மாநாடாக இந்த மாநாடு நடைபெறுகிறது. இதனைத் தொடங்கி வைத்து மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ''மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், சுப்புலட்சுமி மகளிர் உதவித்திட்டம் உள்ளிட்டப் பல திட்டங்கள் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையில் மக்களுக்காக செயல்பட்டு வருகிறது.

அதில் குறிப்பாக, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், இந்த மூன்று திட்டங்களும் இந்தியாவில் இதுவரையில் எந்த மாநிலத்திலும் செயல்படாத திட்டங்கள் என்பதை பெருமையுடன் சொல்கிறேன்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு மேலும் மேலும் புகழடைய வேண்டும் என்பது எனது விருப்பம். எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனையை தமிழ்நாடு செய்து வருகிறது. தடுப்பூசியிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. மேலும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.

மருத்துவ வளர்ச்சி மேம்பாட்டிலும் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்க வேண்டும்; அதற்கான திட்டம் போட வேண்டும். நோய்கள், புது அவதாரம் எடுத்து வருகிறது. அதனை வெல்லும் அளவில் இருக்க வேண்டும். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவே பல நோய்களுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

எனவே, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக அரசின் சார்பில் என்ன செய்யலாம் என்பது குறித்து திட்டமிட வேண்டும். மேலும், அரசு மருத்துவமனைக்குத் தேவையான உட்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளின் செயல்பாடுகளை அவ்வப்போது தணிக்கை செய்ய வேண்டும். தமிழ்நாடு சுகாதாரத்துறை உயரிய நிலையை எட்ட வேண்டும் என்பதே விருப்பம்' எனப் பேசினார்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவர் ரயில் மோதி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.