ETV Bharat / state

'போராடும் மருத்துவ மாணவர்களை முதலமைச்சர் அழைத்து பேச வேண்டும்'

author img

By

Published : Aug 6, 2019, 7:04 PM IST

சென்னை: தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்திவரும் மருத்துவ மாணவர்களை முதலமைச்சர் அழைத்துப் பேச வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

medical college students protest national medical commission bill

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கடந்த ஒருவாரமாக தமிழ்நாடு முழுவதிலுமுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராடிவருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் அழைத்துப் பேச வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


இதுபற்றி அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்தரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தேசிய மருத்துவ ஆணைய மசோதா மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய வகையில் உள்ளது. நவீன அறிவியல் மருத்துவம் படிக்ககாதவர்கள் ஆறு மாத காலம் பயிற்சி எடுத்த நவீன மருத்துவர் போல் சிகிச்சையளிக்க உரிமம் வழங்க இம்மசோதா வழிவகை செய்கிறது.

ரவீந்திரன்

இந்திய மருத்துவக் கழகத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும் அறிவியல் சார்ந்த மருத்துவத்தை மட்டுமே கற்பித்தது. பிற்போக்கான மருத்துவத்தை ஊக்குவிக்கவில்லை. ஆகையால் இந்திய மருத்துவக் கழகத்தை கலைக்கக் கூடாது. மருத்து கல்வி வணிகமயமாவதைத் தடுக்க வேண்டும். மேலும் போராடும் மருத்துவக்கல்லூரி மாணவர்களை அழைத்து முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கடந்த ஒருவாரமாக தமிழ்நாடு முழுவதிலுமுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராடிவருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் அழைத்துப் பேச வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


இதுபற்றி அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்தரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தேசிய மருத்துவ ஆணைய மசோதா மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய வகையில் உள்ளது. நவீன அறிவியல் மருத்துவம் படிக்ககாதவர்கள் ஆறு மாத காலம் பயிற்சி எடுத்த நவீன மருத்துவர் போல் சிகிச்சையளிக்க உரிமம் வழங்க இம்மசோதா வழிவகை செய்கிறது.

ரவீந்திரன்

இந்திய மருத்துவக் கழகத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும் அறிவியல் சார்ந்த மருத்துவத்தை மட்டுமே கற்பித்தது. பிற்போக்கான மருத்துவத்தை ஊக்குவிக்கவில்லை. ஆகையால் இந்திய மருத்துவக் கழகத்தை கலைக்கக் கூடாது. மருத்து கல்வி வணிகமயமாவதைத் தடுக்க வேண்டும். மேலும் போராடும் மருத்துவக்கல்லூரி மாணவர்களை அழைத்து முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

Intro:போராட்டும் மருத்துவ மாணவர்களை முதலமைச்சர் அழைத்து பேச வேண்டும்


Body:போராட்டும் மருத்துவ மாணவர்களை முதலமைச்சர் அழைத்து பேச வேண்டும்

சென்னை,
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மருத்துவ மாணவர்களை முதலமைச்சர் அழைத்து பேச வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்தரநாத், ஏழை எளிய மக்களுக்கும் சமூகநீதிக்கும் மாநில உரிமைகளுக்கும் கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் மருத்துவக் கல்வியில் நிலவும் மதச்சார்பின்மைக்கு எதிரான ஜனநாயக விரோத தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறக்கூடாது.

இந்திய மருத்துவக் கழகத்தின் சில குறைபாடுகள் இருந்தாலும் அதன் மூலம் பிற்போக்கான மருத்துவம் குறித்து கற்பிக்கப்படவில்லை. அறிவியல் சார்ந்த மருத்துவ மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்தது. எனவே இந்திய மருத்துவ கழகத்தை ஒழிக்கக் கூடாது.

மாநில உரிமைகளை பறிக்கும் நெக்ஸ்ட் தேர்வை மாணவர்கள் மத்தியில் திணிக்கக் கூடாது. மருத்துவ சேவையின் தரத்தை பாதிக்கும் இணைப்பு படிப்புகளை புகுத்தக் கூடாது. இதன் மூலம் கிராமப்புறங்களுக்கு தனியாக மருத்துவர்களும் நகர்புறத்திற்கு தனியாக மருத்துவரும் உருவாகும் நிலை ஏற்படும். மக்களுக்கான மருத்துவ சேவையும் பாதிக்கப்படும்.

மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவையின் தரத்தை கெடுக்கும் வகையில் நவீன அறிவியல் மருத்துவ படிப்பை படிக்காதோர் நவீன அறிவியல் முறையில் சிகிச்சை அளிக்க உரிமம் வழங்க கூடாது. அரசியல் சட்டத்திற்கு எதிரான வரைவு தேசிய கல்விக்கொள்கை 2019 திரும்ப பெற வேண்டும்.
மருத்துவக்கல்வியில் கார்பெட் மற்றும் வணிக மையமாவதை தடுக்க வேண்டும். மருத்துவக்கல்வியில் மாநில உரிமைகளை பறிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி மருத்துவ மாணவர்கள் போராடி வருகின்றனர். போராடும் மாணவர்களை தமிழக முதலமைச்சர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கோரிக்கையை மத்திய அரசிற்கு முதலமைச்சர் கொண்டு செல்ல வேண்டும்.

மருத்துவ மாணவர்களின் கோரிக்கைக்காகவும், சுகாதாரத்திற்காகவும் பொது மக்கள் தாங்களாக முன்வந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.





Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.