ETV Bharat / state

ஜெயலலிதா நினைவிடத்தில் நடைபெற்ற முதல் திருமணம்

author img

By

Published : Sep 11, 2019, 12:26 PM IST

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக நிர்வாகி பவானி சங்கரின் மகனுக்குத் திருமணம் நடைபெற்றது.

marriage at jayalalitha memorial

சென்னையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், எம்ஜிஆர் மன்ற தென்சென்னை வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் பவானி சங்கரின் மகன் திருமணம், எம்ஜிஆர் மன்ற மாநில செயலாளர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது.

இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா, முன்னாள் மாநகராட்சி மன்ற உறுப்பினர் சின்னையன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஜெயலலிதா நினைவிடத்தில் நடைபெற்ற முதல் திருமணம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரின் ஆசியுடன் நடைபெறும் முதல் திருமணம் இது. இந்த திருமணம் நடத்துவதற்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அனுமதி வழங்கினர். மறைந்த முதலமைச்சரின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் தலைமையில் இத்திருமணம் நடைபெறுவதை நாங்கள் பெருமையாக எண்ணுகிறோம் என அவர் கூறினார்.

சென்னையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், எம்ஜிஆர் மன்ற தென்சென்னை வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் பவானி சங்கரின் மகன் திருமணம், எம்ஜிஆர் மன்ற மாநில செயலாளர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது.

இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா, முன்னாள் மாநகராட்சி மன்ற உறுப்பினர் சின்னையன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஜெயலலிதா நினைவிடத்தில் நடைபெற்ற முதல் திருமணம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரின் ஆசியுடன் நடைபெறும் முதல் திருமணம் இது. இந்த திருமணம் நடத்துவதற்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அனுமதி வழங்கினர். மறைந்த முதலமைச்சரின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் தலைமையில் இத்திருமணம் நடைபெறுவதை நாங்கள் பெருமையாக எண்ணுகிறோம் என அவர் கூறினார்.
Intro:ஜெயலலிதா நினைவிடத்தில் திருமணம்


Body:ஜெயலலிதா நினைவிடத்தில் திருமணம்
சென்னை,
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக நிர்வாகி மகனுக்கு திருமணம் நடைபெற்றது.

சென்னையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக எம்ஜிஆர் மன்ற தென்சென்னை வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் பவானி சங்கர் மூத்த மகன் சிவராமன் என்கிற சதீஷ் , மணமகள் தீபிகாவுக்கு அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில செயலாளர் தமிழ்மகன் உசேன் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

அதிமுக பொதுச்செயலாளரும், மறைந்த தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை . அந்தக் கட்சியினர் தற்போது கடவுளாகவே நினைத்து வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் தாலி எடுத்துக் கொடுக்க மணமகன் மணமகள் தீபிகா கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.
இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா,முன்னாள் மாநகராட்சி மன்ற உறுப்பினர் சின்னையன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரின் ஆசியுடன் நடைபெறும் முதல் திருமணம். இந்த திருமணத்திற்கு நடத்துவதற்கு அனுமதி இணை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் வழங்கினர். இந்த திருமணத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் நேரில் வந்தால் எடுத்து வாழ்த்தினார். அதிமுகவின் நிர்வாகி திருமணம் நடைபெறுவது என்பது சிறப்பானது என தெரிவித்தார்.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.