ETV Bharat / state

அண்ணா பல்கலை. மாணவர்களின் நலன்கருதி அரசு நல்ல முடிவை எடுக்கும் - நீதிபதிகள் நம்பிக்கை

author img

By

Published : Dec 4, 2020, 6:31 PM IST

அண்ணா பல்கலைகழகத்தின்கீழ் உள்ள கல்லூரிகள் மற்றும் அதில் பயிலும் மாணவர்களின் நலன்கருதி பல்கலைக்கழக வேந்தர் மற்றும் தமிழ்நாடு அரசு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கில் உரிய முடிவு எடுப்பார்கள் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை நம்புவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

madurai high court bench about anna university vc case
madurai high court bench about anna university vc case

மதுரை: கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிதணிக்கைகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டுமுதல் துணைவேந்தராகப் பணியாற்றிவரும் சூரப்பா மீது இணையதளம் மூலமாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் புகாரில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.200 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்குள்பட்ட 13 தொகுதி கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பதில் ஒவ்வொரு ஆசிரியர்களிடமிருந்து 13 முதல் 15 லட்சம் ரூபாய் வரை பணம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் துணைவேந்தர் சூரப்பா தனது மகளை சட்டவிரோதமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி அமர்த்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகார் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் முகவரி உள்பட அனைத்து தகவல்களும் தவறானதாக உள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவில் மிகப்பெரிய பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரைக் கலங்கப்படுத்துவதாகவும் அதில் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்களைக் கலங்கப்படுத்துவதாகவும் உள்ளது.

மேலும், துணைவேந்தரை விசாரணை செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உள்ளது. எனவே, சூரப்பா மீது விசாரணை செய்வது ஏற்கத்தக்கதல்ல. இந்த விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதிக்கவும், உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள அரசாணையை ரத்துசெய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்டது என்பதால் வழக்கை பொதுநல வழக்காக விசாரிக்க முடியாது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தன்னையும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ளக் கூறி மனு செய்திருந்தார் என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், அண்ணா பல்கலைகழகத்தின்கீழ் உள்ள கல்லூரிகள், மாணவர்கள் ஆகியோரின் நலன்கருதி வேந்தர், தமிழ்நாடு அரசு இந்த வழக்கில் உரிய முடிவு எடுப்பார்கள் என்ற நீதிமன்றம் நம்புவதாகக் கூறி வழக்கை டிசம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மதுரை: கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிதணிக்கைகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டுமுதல் துணைவேந்தராகப் பணியாற்றிவரும் சூரப்பா மீது இணையதளம் மூலமாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் புகாரில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.200 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்குள்பட்ட 13 தொகுதி கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பதில் ஒவ்வொரு ஆசிரியர்களிடமிருந்து 13 முதல் 15 லட்சம் ரூபாய் வரை பணம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் துணைவேந்தர் சூரப்பா தனது மகளை சட்டவிரோதமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி அமர்த்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகார் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் முகவரி உள்பட அனைத்து தகவல்களும் தவறானதாக உள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவில் மிகப்பெரிய பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரைக் கலங்கப்படுத்துவதாகவும் அதில் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்களைக் கலங்கப்படுத்துவதாகவும் உள்ளது.

மேலும், துணைவேந்தரை விசாரணை செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உள்ளது. எனவே, சூரப்பா மீது விசாரணை செய்வது ஏற்கத்தக்கதல்ல. இந்த விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதிக்கவும், உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள அரசாணையை ரத்துசெய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்டது என்பதால் வழக்கை பொதுநல வழக்காக விசாரிக்க முடியாது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தன்னையும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ளக் கூறி மனு செய்திருந்தார் என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், அண்ணா பல்கலைகழகத்தின்கீழ் உள்ள கல்லூரிகள், மாணவர்கள் ஆகியோரின் நலன்கருதி வேந்தர், தமிழ்நாடு அரசு இந்த வழக்கில் உரிய முடிவு எடுப்பார்கள் என்ற நீதிமன்றம் நம்புவதாகக் கூறி வழக்கை டிசம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.