ETV Bharat / state

Ramajeyam murder case - விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு!

author img

By

Published : Jul 17, 2023, 4:39 PM IST

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் கூடுமான விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC
அமைச்சர்

சென்னை: தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருச்சியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாததால், மாநில போலீசாரே வழக்கை விசாரிக்க உத்தரவிடக் கோரி கே.என்.நேருவின் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ-யைச் சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் 11 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனையும் செய்யப்பட்டது. அதற்கான முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று(ஜூலை 17) விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் ஆகின்றன, பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரித்துவிட்டன, இந்நிலையில் நியாயம் கிடைக்கும் என இன்னும் நம்பிக்கை இருக்கிறதா? என மனுதாரர் தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை திருப்தியளிப்பதாகவும், நியாயம் கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார். வழக்குத் தொடர்பாக இதுவரை ஆயிரத்து 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையைத் தொடர அனுமதியளித்தும், விசாரணையை முடித்து கூடுமான விரைவில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

ராமஜெயம் கொலை வழக்கு:

தற்போதைய திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி திருச்சி தில்லை நகரில் நடைப்பயிற்சிக்கு சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருச்சி மாநகர போலீசார் நடத்திய விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்பதால், கடந்த 2012ஆம் ஆண்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையிலும், கடைசிவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்குத் தொடர்பாக, கடந்த 2021ஆம் ஆண்டு கே.என்.நேருவின் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றத்தை நாடியதையடுத்து விசாரணை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க: நார்கோ சோதனை மூலம் கடினமான வழக்குகளைத் தீர்க்க முடியுமா? விசாரணையில் என்னென்ன சிக்கல்?

சென்னை: தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருச்சியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாததால், மாநில போலீசாரே வழக்கை விசாரிக்க உத்தரவிடக் கோரி கே.என்.நேருவின் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ-யைச் சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் 11 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனையும் செய்யப்பட்டது. அதற்கான முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று(ஜூலை 17) விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் ஆகின்றன, பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரித்துவிட்டன, இந்நிலையில் நியாயம் கிடைக்கும் என இன்னும் நம்பிக்கை இருக்கிறதா? என மனுதாரர் தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை திருப்தியளிப்பதாகவும், நியாயம் கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார். வழக்குத் தொடர்பாக இதுவரை ஆயிரத்து 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையைத் தொடர அனுமதியளித்தும், விசாரணையை முடித்து கூடுமான விரைவில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

ராமஜெயம் கொலை வழக்கு:

தற்போதைய திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி திருச்சி தில்லை நகரில் நடைப்பயிற்சிக்கு சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருச்சி மாநகர போலீசார் நடத்திய விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்பதால், கடந்த 2012ஆம் ஆண்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையிலும், கடைசிவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்குத் தொடர்பாக, கடந்த 2021ஆம் ஆண்டு கே.என்.நேருவின் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றத்தை நாடியதையடுத்து விசாரணை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க: நார்கோ சோதனை மூலம் கடினமான வழக்குகளைத் தீர்க்க முடியுமா? விசாரணையில் என்னென்ன சிக்கல்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.