ETV Bharat / state

Sengol: சோழர்களின் சொத்தா?. பாண்டியர்களின் கலை நயமா?.. தென்காசியில் ஒரு செங்கோல்

author img

By

Published : May 27, 2023, 7:13 PM IST

நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் செங்கோல் வைக்கப்படும் நிலையில், தமிழகத்தின் தென்காசி கோயிலில் சிவன் சிலையிலிருக்கும் செங்கோல் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

Sengol
Sengol

தென்காசி : புதிய நாடாளுமன்ற கட்டடம் நாளை (மே. 28) திறக்கப்பட உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தால் நேருவுக்கு செங்கோல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகாரம் கைமாறுவதன் அடையாளமாக, மவுன்ட்பேட்டனிடம் இருந்து செங்கோல் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதுபுறம் இருக்க புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட உள்ள செங்கோலுக்கு, சோழர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறைகளில் ஒன்றுதான் செங்கோல் முறை என்றும் கூறப்பட்டது. பாண்டியர்கள் காலத்திலும், சிற்பக் கலை செழித்தோங்கி காணப்பட்டது என்றும் தென்னகத்தின் காசி என்று அழைப்படும் தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள கலை வேலைப்பாடுகளே, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் உருவகத்தின் சாட்சி என்றும் கூறப்படுகிறது.

அதாவது மிகவும் புகழ் பெற்ற தென்காசி காசி விஸ்வரர் கோயில் பராக்கிரமப் பாண்டிய மன்னர் ஆட்சி காலத்தில் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் கலை நயமிக்க சிற்பங்கள் கூடுதல் சிறப்பாக உள்ளது. கோயிலின் நுழைவுப் பகுதியில் சிவன் நடனமாடும் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு நான்கு புறமும் சுற்றி பல்வேறு சிற்பங்கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சிவன் ஊர்த்துவ தாண்டவம், மகா தாண்டவம் ஆடும் காட்சி சிற்பமாக கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது அதில் சிவன் இடது கையில் அதிகார நந்தி சின்னம் பொறித்த செங்கோலை கம்பீரமாக ஏந்தியபடி நடனமாடுகிறார்.

செங்கோல் என்பது அப்போது மன்னர் ஆட்சியின் ஒரு அரசின் சின்னமாக பார்க்கப்பட்டது. செங்கோல் உயர உயர நாட்டு மக்களும் உயர்வார்கள் என்ற நம்பப்பட்டது. அதாவது பாண்டி என்றால் மாடு என்று பொருள் கொள்கிறது. அந்த வகையில் திருவள்ளுவர் கூட திருக்குறளில் ஒரு நாட்டின் முதல் செல்வம் மாடு என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் பாண்டிய மன்னர்கள் எப்போதும் தங்களை அரசன் என்பதை விட ஒரு உழவன் என்று சொல்வதில் தான் அதிக பெருமை கொண்டதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலை கட்டிய பராக்கிரம பாண்டியன் எப்போதும் தன்னை உழவன் என்று சொல்வதில் தான் பெருமை கொண்டு இருந்ததாக வரலாறு கூறுகிறது. மேலும் உழவுக்கும் உழவுத் தொழிலுக்கும் பாண்டிய மன்னர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக பண்டைய ஏட்டுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே மாடு உழவுத் தொழில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் மாடுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பாண்டிய மன்னர்கள் காளை சின்ன பொறித்த செங்கோலை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது. செங்கோல் குறித்த தேடல் அதிகரித்துள்ள நிலையில், பராக்கிரம பாண்டியர்கள் கட்டப்பட்ட தென்காசி காசி விஸ்வரர் கோயில் செங்கோல் ஏந்திய சிவன் சிலை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க : புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ஏன் பங்கேற்க கூடாது? - கமல்ஹாசன் கேள்வி!

தென்காசி : புதிய நாடாளுமன்ற கட்டடம் நாளை (மே. 28) திறக்கப்பட உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தால் நேருவுக்கு செங்கோல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகாரம் கைமாறுவதன் அடையாளமாக, மவுன்ட்பேட்டனிடம் இருந்து செங்கோல் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதுபுறம் இருக்க புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட உள்ள செங்கோலுக்கு, சோழர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறைகளில் ஒன்றுதான் செங்கோல் முறை என்றும் கூறப்பட்டது. பாண்டியர்கள் காலத்திலும், சிற்பக் கலை செழித்தோங்கி காணப்பட்டது என்றும் தென்னகத்தின் காசி என்று அழைப்படும் தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள கலை வேலைப்பாடுகளே, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் உருவகத்தின் சாட்சி என்றும் கூறப்படுகிறது.

அதாவது மிகவும் புகழ் பெற்ற தென்காசி காசி விஸ்வரர் கோயில் பராக்கிரமப் பாண்டிய மன்னர் ஆட்சி காலத்தில் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் கலை நயமிக்க சிற்பங்கள் கூடுதல் சிறப்பாக உள்ளது. கோயிலின் நுழைவுப் பகுதியில் சிவன் நடனமாடும் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு நான்கு புறமும் சுற்றி பல்வேறு சிற்பங்கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சிவன் ஊர்த்துவ தாண்டவம், மகா தாண்டவம் ஆடும் காட்சி சிற்பமாக கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது அதில் சிவன் இடது கையில் அதிகார நந்தி சின்னம் பொறித்த செங்கோலை கம்பீரமாக ஏந்தியபடி நடனமாடுகிறார்.

செங்கோல் என்பது அப்போது மன்னர் ஆட்சியின் ஒரு அரசின் சின்னமாக பார்க்கப்பட்டது. செங்கோல் உயர உயர நாட்டு மக்களும் உயர்வார்கள் என்ற நம்பப்பட்டது. அதாவது பாண்டி என்றால் மாடு என்று பொருள் கொள்கிறது. அந்த வகையில் திருவள்ளுவர் கூட திருக்குறளில் ஒரு நாட்டின் முதல் செல்வம் மாடு என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் பாண்டிய மன்னர்கள் எப்போதும் தங்களை அரசன் என்பதை விட ஒரு உழவன் என்று சொல்வதில் தான் அதிக பெருமை கொண்டதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலை கட்டிய பராக்கிரம பாண்டியன் எப்போதும் தன்னை உழவன் என்று சொல்வதில் தான் பெருமை கொண்டு இருந்ததாக வரலாறு கூறுகிறது. மேலும் உழவுக்கும் உழவுத் தொழிலுக்கும் பாண்டிய மன்னர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக பண்டைய ஏட்டுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே மாடு உழவுத் தொழில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் மாடுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பாண்டிய மன்னர்கள் காளை சின்ன பொறித்த செங்கோலை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது. செங்கோல் குறித்த தேடல் அதிகரித்துள்ள நிலையில், பராக்கிரம பாண்டியர்கள் கட்டப்பட்ட தென்காசி காசி விஸ்வரர் கோயில் செங்கோல் ஏந்திய சிவன் சிலை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க : புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ஏன் பங்கேற்க கூடாது? - கமல்ஹாசன் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.