ETV Bharat / state

சிவனின் அருள் பெற சோமவார விரதம்..!

சிவனுக்காக 16 திங்கட்கிழமைகள் விரதம் இருந்து வழிபடுவதே சோமவார விரதம் என அழைக்கப்படுகிறது.

author img

By

Published : Aug 9, 2021, 7:14 AM IST

சிவலிங்கம்
சிவலிங்கம்

சென்னை: வட இந்திய மொழியில் திங்கள் கிழமை சோமவாரம் என்றழைக்கப்படுகிறது. பொதுவாக திங்கள் கிழமை சிவனுக்குரிய நாளாக பூசை செய்யப்படுகிறது. 16 திங்கல் கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து வழிபடுவது “16 சோமவார விரதம்” என அழைக்கப்படுகிறது. இந்த விரதத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்.

இதுபோன்று சோமவார விரதம் இருப்பவர்கள் தொடர்ந்து 16 திங்கள் கிழமைகள் விரதம் இருப்பதே இதன் முக்கிய சிறப்பாகும். பக்தர்கள் அதிகாலை எழுந்து சிவனுக்கு மலர்களை சூட்டி, பொங்கல், பாயாசம் போன்ற உணவுகளை சிவனுக்கு படைக்க வேண்டும். பின்னர் சிவ மந்திரங்களை படித்து பூசிக்க வேண்டும்.

சிவலிங்கம்
சிவலிங்கம்

இந்த விரதம் இருப்பவர்கள் மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பார்கள். ஆனால வேலைக்கு செல்பவர்கள் மூன்று வேளையும் உப்பு சேர்க்காத உணவுகளை சாப்பிடலாம். பால், பழங்கள் போன்ற உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம். இது போன்று 16 திங்கட்கிழமை திட மனதோடு விரதம் இருக்கும் திருமணமாகாத ஆண்கள், பெண்களுக்கு விரைவில் திருமணமாகும். குடும்பத்தில் இருக்கும் பெரிய சிக்கல்கள் தீரும் என்பது நம்பிக்கை.

இதையும் படிங்க: ஆடி சனிப் பிரதோஷத்தில் சிவனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுங்கள்!

சென்னை: வட இந்திய மொழியில் திங்கள் கிழமை சோமவாரம் என்றழைக்கப்படுகிறது. பொதுவாக திங்கள் கிழமை சிவனுக்குரிய நாளாக பூசை செய்யப்படுகிறது. 16 திங்கல் கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து வழிபடுவது “16 சோமவார விரதம்” என அழைக்கப்படுகிறது. இந்த விரதத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்.

இதுபோன்று சோமவார விரதம் இருப்பவர்கள் தொடர்ந்து 16 திங்கள் கிழமைகள் விரதம் இருப்பதே இதன் முக்கிய சிறப்பாகும். பக்தர்கள் அதிகாலை எழுந்து சிவனுக்கு மலர்களை சூட்டி, பொங்கல், பாயாசம் போன்ற உணவுகளை சிவனுக்கு படைக்க வேண்டும். பின்னர் சிவ மந்திரங்களை படித்து பூசிக்க வேண்டும்.

சிவலிங்கம்
சிவலிங்கம்

இந்த விரதம் இருப்பவர்கள் மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பார்கள். ஆனால வேலைக்கு செல்பவர்கள் மூன்று வேளையும் உப்பு சேர்க்காத உணவுகளை சாப்பிடலாம். பால், பழங்கள் போன்ற உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம். இது போன்று 16 திங்கட்கிழமை திட மனதோடு விரதம் இருக்கும் திருமணமாகாத ஆண்கள், பெண்களுக்கு விரைவில் திருமணமாகும். குடும்பத்தில் இருக்கும் பெரிய சிக்கல்கள் தீரும் என்பது நம்பிக்கை.

இதையும் படிங்க: ஆடி சனிப் பிரதோஷத்தில் சிவனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.