ETV Bharat / state

புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு

author img

By

Published : Jun 21, 2021, 7:43 AM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுக்க தற்போது உள்ள ஊரடங்கை மேலும் சில தளர்வுகளோடு ஜூன் 28ஆம் தேதிவரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு
புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் கரோனா தொற்று பாதிப்பின் அடிப்படையில், மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வகை 1

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை

வகை 2

அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர்

வகை 3

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு

நடைமுறையில் உள்ள அனுமதி

  • வகை ஒன்றில் உள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
  • வகை இரண்டில் உள்ள 23 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாகச் செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய தளர்வுகள்:

அமலில் உள்ள தளர்வுகள்
நடைமுறையில் உள்ள தளர்வுகள்

அத்தியாவசிய தேவைகளுக்குப் பிரச்சினை இல்லை

  • மளிகை, பலசரக்குகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, பழம், பூ உள்ளிட்டவை விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6.00 மணிமுதல் மாலை 7.00 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
  • உணவகங்கள், பேக்கரிகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை அனுமதிக்கப்படும்.
  • சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணிமுதல் மாலை7.00 மணிவரை அனுமதிக்கப்படும்.

50% பணியாளர்களுடன் நிறுவனங்கள்

  • அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதர அரசு அலுவலகங்கள், 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து தனியார் நிறுவனங்கள், 33 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கிற்குத் தடை இல்லை

  • அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlor, Saloons, Spas) குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணிமுதல் மாலை 7.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • காலை 6.00 மணிமுதல் மாலை 7.00 மணிவரை விளையாட்டுப் பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், அனுமதிக்கப்படும்.

மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

  • பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.

வாடகை வாகனங்களுக்கு விலக்கு

  • வாடகை வாகனங்களில் பயணிகள் இ-பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். டாக்ஸி போன்ற வாகனங்களில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் கரோனா தொற்று பாதிப்பின் அடிப்படையில், மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வகை 1

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை

வகை 2

அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர்

வகை 3

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு

நடைமுறையில் உள்ள அனுமதி

  • வகை ஒன்றில் உள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
  • வகை இரண்டில் உள்ள 23 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாகச் செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய தளர்வுகள்:

அமலில் உள்ள தளர்வுகள்
நடைமுறையில் உள்ள தளர்வுகள்

அத்தியாவசிய தேவைகளுக்குப் பிரச்சினை இல்லை

  • மளிகை, பலசரக்குகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, பழம், பூ உள்ளிட்டவை விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6.00 மணிமுதல் மாலை 7.00 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
  • உணவகங்கள், பேக்கரிகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை அனுமதிக்கப்படும்.
  • சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணிமுதல் மாலை7.00 மணிவரை அனுமதிக்கப்படும்.

50% பணியாளர்களுடன் நிறுவனங்கள்

  • அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதர அரசு அலுவலகங்கள், 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து தனியார் நிறுவனங்கள், 33 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கிற்குத் தடை இல்லை

  • அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlor, Saloons, Spas) குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணிமுதல் மாலை 7.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • காலை 6.00 மணிமுதல் மாலை 7.00 மணிவரை விளையாட்டுப் பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், அனுமதிக்கப்படும்.

மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

  • பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.

வாடகை வாகனங்களுக்கு விலக்கு

  • வாடகை வாகனங்களில் பயணிகள் இ-பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். டாக்ஸி போன்ற வாகனங்களில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.