ETV Bharat / state

'அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்தாது' - மு.க. ஸ்டாலின் சாடல்!

author img

By

Published : Nov 15, 2019, 5:17 PM IST

சென்னை: உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் திமுகவிற்கு கிடையாது என்றும், திட்டமிட்டு தேர்தலை நிறுத்தும் நடவடிக்கையில் அதிமுக ஈடுபட்டுள்ளதாகவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

dmk leader mk stalin

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், திமுக தலைவரும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க. ஸ்டாலின் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். குறிப்பாக வயதானவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும், கணிணிப் பயிற்சி முடித்தவர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், ' உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதில், எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சர்கள் வரை, திட்டமிட்டு கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். சென்றமுறை உள்ளாட்சி அமைப்புகளில் உரிய ஒதுக்கீட்டைச் செய்யாமல் தேர்தலை அறிவித்தார்கள். அதனால், முறையாக தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் வழக்கு தொடுத்தோம்.

ஆனால், திமுகதான் தேர்தலை நடத்தவிடாமல் செய்கிறது என ஆளும் தரப்பினர் மீண்டும் மீண்டும் பொய் சொல்லி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலை அதிமுக, ஆட்சியில் இருக்கும் வரை நடத்த மாட்டார்கள். ஏனென்றால், தோல்வி பயம். அதனால்தான் திட்டமிட்டு மாவட்டங்களை இப்போது பிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படி பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலிருந்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு 50 ஆயிரம் வாக்குகளைப் பெறக்கூடிய ஊராட்சித் தலைவர்கள், ஐந்தாயிரம் வாக்குகளைப் பெறக்கூடிய ஊராட்சித் தலைவர்கள், ஒன்றியத் தலைவர்கள் என எந்த வகையில் பிரித்து, தேர்தலை நடத்தப் போகிறார்கள் என ஒரு சந்தேகத்தைத்தான் நாங்கள் கேட்டுள்ளோம்.

தேர்தலை நிறுத்தச் சொல்லி ஒரு வார்த்தை கூட கூறவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு, உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அதிமுக அரசு முயல்கிறதோ என சந்தேகம் எழுகிறது’ எனக் கூறினார்.

அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்தாது - மு.க. ஸ்டாலின்

ஐஐடி தொடர் தற்கொலைகள் குறித்த கேள்விக்கு, ' ஐஐடி மாணவி தற்கொலை விசாரணை முறையாக நடத்தப்பட வேண்டும். அங்கு தற்கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' எனவும் மு.க. ஸ்டாலின் கூறினார். இந்நிகழ்ச்சியின்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: அதிமுகவை பிராண்டுவதிலேயே குறியாக இருக்கும் ஸ்டாலின் - செல்லூர் ராஜு கலாய்

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், திமுக தலைவரும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க. ஸ்டாலின் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். குறிப்பாக வயதானவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும், கணிணிப் பயிற்சி முடித்தவர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், ' உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதில், எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சர்கள் வரை, திட்டமிட்டு கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். சென்றமுறை உள்ளாட்சி அமைப்புகளில் உரிய ஒதுக்கீட்டைச் செய்யாமல் தேர்தலை அறிவித்தார்கள். அதனால், முறையாக தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் வழக்கு தொடுத்தோம்.

ஆனால், திமுகதான் தேர்தலை நடத்தவிடாமல் செய்கிறது என ஆளும் தரப்பினர் மீண்டும் மீண்டும் பொய் சொல்லி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலை அதிமுக, ஆட்சியில் இருக்கும் வரை நடத்த மாட்டார்கள். ஏனென்றால், தோல்வி பயம். அதனால்தான் திட்டமிட்டு மாவட்டங்களை இப்போது பிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படி பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலிருந்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு 50 ஆயிரம் வாக்குகளைப் பெறக்கூடிய ஊராட்சித் தலைவர்கள், ஐந்தாயிரம் வாக்குகளைப் பெறக்கூடிய ஊராட்சித் தலைவர்கள், ஒன்றியத் தலைவர்கள் என எந்த வகையில் பிரித்து, தேர்தலை நடத்தப் போகிறார்கள் என ஒரு சந்தேகத்தைத்தான் நாங்கள் கேட்டுள்ளோம்.

தேர்தலை நிறுத்தச் சொல்லி ஒரு வார்த்தை கூட கூறவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு, உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அதிமுக அரசு முயல்கிறதோ என சந்தேகம் எழுகிறது’ எனக் கூறினார்.

அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்தாது - மு.க. ஸ்டாலின்

ஐஐடி தொடர் தற்கொலைகள் குறித்த கேள்விக்கு, ' ஐஐடி மாணவி தற்கொலை விசாரணை முறையாக நடத்தப்பட வேண்டும். அங்கு தற்கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' எனவும் மு.க. ஸ்டாலின் கூறினார். இந்நிகழ்ச்சியின்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: அதிமுகவை பிராண்டுவதிலேயே குறியாக இருக்கும் ஸ்டாலின் - செல்லூர் ராஜு கலாய்

Intro:உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் திமுகவிற்கு கிடையாது எனவும் வேண்டுமென்றே திட்டமிட்டு தேர்தலை நிறுத்தும் நடவடிக்கையில் அதிமுக ஈடுபட்டுள்ளதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்Body:உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் திமுகவிற்கு கிடையாது எனவும் வேண்டுமென்றே திட்டமிட்டு தேர்தலை நிறுத்தும் நடவடிக்கையில் அதிமுக ஈடுபட்டுள்ளதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு திமுக தலைவரும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு க ஸ்டாலின் இன்று வருகை தந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் குறிப்பாக வயதானவர்களுக்கு 40 பேருக்கு மூக்கு கண்ணாடிகளை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் செயல்பட்டுவரும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில்  கணிணி பயிற்ச்சி முடித்தவர்களுக்கு 128 பேருக்கு மடிக்கணினி வழங்க பட்டது மேலும் தற்போது கணிணி வகுப்பு முடித்த 67 பேருக்கு அதற்கான சான்றிதழ்களையும் வழங்கினார் பின்னர் மாணவிகளிடையே மேடையில் பேசிய ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு பணிகளை நான் மேற்கொண்டு வந்தாலும் என்னை கவர்ந்த பணி அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் உங்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு போன்றவற்றை வழங்குவது தான் இந்த அகாடெமி மூலம் முதல் பேட்ச் 61 மாணவ மாணவிகளும்  இரண்டாவது பேட்சில் 67 மாணவ மாணவிகளும் தற்போது மூன்றாவது பயிற்சியில் 50 மாணவ மாணவிகளும் பயிற்சி முடித்துள்ளனர் இவர்களில் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது இதனால் இந்த அனிதா ஆச்சீவர்ஸ் அகாடமியை  234 தொகுதியிலும் செயல்படுத்த வேண்டுமென நான் திமுகவினருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன் அதில் முதல் முதல் கட்டமாக துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்  அவர்களால் அப்பகுதியிலஇந்த  வசதி தொடங்கப்பட்டுள்ளது இதேபோல மற்ற பகுதிகளில் தொடங்க வேண்டும் என நான் சட்டமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்:அதிமுகவில் இருக்கின்ற எடப்பாடி முதல்  அவரை சார்ந்து இருக்கக்கூடிய அமைச்சர்கள் வரை திட்டமிட்டு தொடர்ந்து பொய்  சொல்லிக் கொண்டு  உள்ளாட்ச்சி தேர்தலை நடத்தக் கூடாது என்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் சென்றமுறை  உள்ளாட்சி அமைப்புகளில் உரிய ஒதுக்கீடு ஒதுக்காமல் தேர்தலை அறிவித்தார்கள் அதன்பிறகு ஆலந்தூர் பாரதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தேர்தலை நடத்தக் கூடாது என்பது எங்களுடைய விருப்பமில்லை அதை முறையாக நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறோம் இதைத்தான் மக்கள் மன்றத்திடம் சொல்லி வருகிறோம்  ஆனால் திமுக தான் தேர்தலை நடத்த விடாமல் செய்கிறது என ஆளும் தரப்பினர் மீண்டும் மீண்டும் பொய் கூறி வருகின்றனர் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி கிராம பகுதிகளில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம் அதிமுக ஆட்சி இருக்கும்வரை நடத்த மாட்டார்கள் ஏனென்றால் தோல்வி பயம் அதனால் இப்பவும் திட்டமிட்டு 9 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டுள்ளது வேலூரில் மூன்று மாவட்டம் காஞ்சிபுரத்தில் இரண்டு மாவட்டம் விழுப்புரத்தில் இரண்டு மாவட்டம் திருநெல்வேலியில் இரண்டு மாவட்டம் இப்படி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன இப்படி பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு 50 ஆயிரம் ஓட்டுக்களை பெறக்கூடிய ஊராட்சி தலைவர்கள் ஐந்தாயிரம் ஆயிரம் ஓட்டுகளை பெறக்கூடிய ஊராட்சி தலைவர்கள் ஒன்றிய தலைவர்கள் என எந்த வகையில் பிரித்து தேர்தலை நடத்த போகிறார்கள் என ஒரு சந்தேகத்தை நாங்கள் கேட்டுள்ளோம் ஏற்கனவே உயர்நீதிமன்றம் என்னென்ன வழிகளில் தேர்தலை நடத்த வேண்டும் என வழிமுறைகளை வகுத்து வருகின்றதோ அந்த அடிப்படையில் இந்த தேர்தல் நடத்தப்படுமா  என எங்களது அமைப்புச் செயலாளர் மாநில தேர்தல் ஆணையரிடம் சந்தித்து இந்ததேர்தலை எப்படி நடத்தப் போகிறீர்கள் என கேட்டுள்ளார் தேர்தலை நிறுத்த சொல்லி ஒரு வார்த்தை கூட கூறவில்லை வேண்டுமென்றே திட்டமிட்டு தேர்தலை நிறுத்த வேண்டுமென்று இன்று இருக்கக்கூடிய அதிமுக ஆட்சி தங்களை  ஈடுபடுத்திக் கொண்டுள்ளதோ  என சந்தேகம் வருகிறது.  நாங்கள் அதை பற்றி கவலைப்படவில்லை எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளோம்.  ஐஐடி தொடர் தற்கொலைகள் குறித்த கேள்விக்கு அந்த விசாரணை முறையாக நடத்தப்பட வேண்டும் அது ஒரு தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கிறது அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து மட்டுமல்ல அனைவருக்கும் கருத்தும் அத தான் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பிகே சேகர்பாபு,மாதவரம் சுதர்சனம் கு க செல்வம்,கேபிபி சாமி,ஆர்டி சேகர் ,தாயகம் கவி ரங்கநாதன் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் ,கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி நாகராஜன் மற்றும் தேவ ஜவகர் உள்ளீட்டோரும் உடனிருந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.