ETV Bharat / state

கழிவுநீரை வெளியேற்றுவதற்கான திருத்திய விதிகளை உள்ளாட்சி அமைப்புகள் பின்பற்ற உத்தரவு

கழிவு நீரை வெளியேற்றுவதற்கான தமிழ்நாடு அரசு திருத்தியுள்ள விதிகளை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும், சம்பந்தப்பட்ட துறைகளும் கடைபிடித்து முறையான தீர்வு காண வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Feb 15, 2023, 11:07 PM IST

கழிவுநீர் அகற்றும் லாரிகளுக்கான தமிழ்நாடு புதிய விதிகள் என்னென்ன?
கழிவுநீர் அகற்றும் லாரிகளுக்கான தமிழ்நாடு புதிய விதிகள் என்னென்ன?

சென்னையில் தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டிடங்களில் இருந்து லாரிகள் மூலம் எடுக்கப்படும் கழிவுநீர், மழைநீர் வாய்க்கால்களில் விடப்படுவதாக வந்த புகாரை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கொர்லபாடி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் லாரிகள் மூலம் கழிவுநீர் வெளியேற்றப்படுவதை முறைப்படுத்த விதிகளில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், திருத்தப்பட்ட விதிகளும் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

திருத்தப்பட்ட புதிய விதிகளின்படி கழிவுகளை வெளியேற்றும் பணியில் ஈடுபடும் லாரிகளுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து உரிய அனுமதி பெறப்பட வேண்டும் என்றும், 2 ஆண்டுக்கான அனுமதிக்கு ரூ.2,500 கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்து எடுக்கப்படும் கழிவுநீர் எங்கு வெளியேற்றப்படுகிறது என்பது குறித்த விவரத்தை ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒருமுறை அனுமதி வழங்கிய உள்ளாட்சி அமைப்புகளிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், விதிகள் வகுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கழிவுநீர் லாரிகளுக்கு அனுமதி வழங்கும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரப்பூர்வ அலுவலர்கள், அந்த உள்ளாட்சி அமைப்புக்கு உட்பட்ட எந்தெந்த பகுதிகளில் கழிவுநீர் கொட்டப்பட வேண்டும் என்பது குறித்தும், யார், யார் கழிவுநீர் அகற்ற அனுமதி பெற்றுள்ளார்கள் என்பது குறித்தும், அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் விதிகளில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

முதன்முறையாக விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.50 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

இதையடுத்து தீர்ப்பாயத்தின் விசாரணையின் முடிவில், இந்த விதிகளை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும், துறைகளும் கண்டிப்பாக கடைபிடித்து கழிவுநீரை வெளியேற்றும் பிரச்னைக்கு முறையான தீர்வு காண வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:பிபிசி சோதனை: ஊடக சுதந்திரத்தை ஆதரிக்கிறோம் - அமெரிக்கா

சென்னையில் தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டிடங்களில் இருந்து லாரிகள் மூலம் எடுக்கப்படும் கழிவுநீர், மழைநீர் வாய்க்கால்களில் விடப்படுவதாக வந்த புகாரை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கொர்லபாடி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் லாரிகள் மூலம் கழிவுநீர் வெளியேற்றப்படுவதை முறைப்படுத்த விதிகளில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், திருத்தப்பட்ட விதிகளும் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

திருத்தப்பட்ட புதிய விதிகளின்படி கழிவுகளை வெளியேற்றும் பணியில் ஈடுபடும் லாரிகளுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து உரிய அனுமதி பெறப்பட வேண்டும் என்றும், 2 ஆண்டுக்கான அனுமதிக்கு ரூ.2,500 கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்து எடுக்கப்படும் கழிவுநீர் எங்கு வெளியேற்றப்படுகிறது என்பது குறித்த விவரத்தை ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒருமுறை அனுமதி வழங்கிய உள்ளாட்சி அமைப்புகளிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், விதிகள் வகுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கழிவுநீர் லாரிகளுக்கு அனுமதி வழங்கும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரப்பூர்வ அலுவலர்கள், அந்த உள்ளாட்சி அமைப்புக்கு உட்பட்ட எந்தெந்த பகுதிகளில் கழிவுநீர் கொட்டப்பட வேண்டும் என்பது குறித்தும், யார், யார் கழிவுநீர் அகற்ற அனுமதி பெற்றுள்ளார்கள் என்பது குறித்தும், அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் விதிகளில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

முதன்முறையாக விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.50 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

இதையடுத்து தீர்ப்பாயத்தின் விசாரணையின் முடிவில், இந்த விதிகளை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும், துறைகளும் கண்டிப்பாக கடைபிடித்து கழிவுநீரை வெளியேற்றும் பிரச்னைக்கு முறையான தீர்வு காண வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:பிபிசி சோதனை: ஊடக சுதந்திரத்தை ஆதரிக்கிறோம் - அமெரிக்கா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.