ETV Bharat / state

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக லட்சுமி நாராயணன் பதவியேற்பு!

author img

By

Published : Feb 27, 2023, 12:40 PM IST

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக லட்சுமி நாராயணன் பதவியேற்றுக் கொண்டார்.

லட்சுமி நாராயணன்
லட்சுமி நாராயணன்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக லட்சுமி நாராயணன் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உய நீதிமன்றத்திற்கு புதிதாக 8 நீதிபதிகளை நியமனம் செய்வது குறித்து பரிந்துரைக்கப்பட்டது.

பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 3 மாவட்ட நீதிபதிகள், வெங்கடாச்சாரி லட்சுமி நாராயணன், லக்சமண சந்திர விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமசாமி நீலகண்டன், கந்தசாமி குழந்தைவேலு, ராமகிருஷ்ணன் ஆகிய 5 வழக்கறிஞர்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

வழக்கறிஞர்களான விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன், மாவட்ட நீதிபதிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டதையடுத்து கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் வெங்கடாச்சாரி லட்சுமி நாராயணனை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்து குடியர்சுத் தலைவர் திரவுபதி முர்மு அண்மையில் உத்தரவிட்டார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக வெங்கடாச்சாரி லட்சுமி நாராயணன் இன்று (பிப்.27) பதவியேற்றுக் கொண்டார்.

கூடுதல் நீதிபதி லட்சுமி நாராயணனுக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத நீதிபதிகளின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்துள்ளது. கூடுதல் நீதிபதிகளின் நியமணத்தால் ஒட்டுமொத்த நீதிபதிகளின் காலியிடங்கள் 17ஆக குறைந்துள்ளது.

இதையும் படிங்க: தமிழ் வளர்ச்சிக்கு கூடுதல் பல்கலைக்கழகங்கள் வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக லட்சுமி நாராயணன் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உய நீதிமன்றத்திற்கு புதிதாக 8 நீதிபதிகளை நியமனம் செய்வது குறித்து பரிந்துரைக்கப்பட்டது.

பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 3 மாவட்ட நீதிபதிகள், வெங்கடாச்சாரி லட்சுமி நாராயணன், லக்சமண சந்திர விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமசாமி நீலகண்டன், கந்தசாமி குழந்தைவேலு, ராமகிருஷ்ணன் ஆகிய 5 வழக்கறிஞர்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

வழக்கறிஞர்களான விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன், மாவட்ட நீதிபதிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டதையடுத்து கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் வெங்கடாச்சாரி லட்சுமி நாராயணனை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்து குடியர்சுத் தலைவர் திரவுபதி முர்மு அண்மையில் உத்தரவிட்டார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக வெங்கடாச்சாரி லட்சுமி நாராயணன் இன்று (பிப்.27) பதவியேற்றுக் கொண்டார்.

கூடுதல் நீதிபதி லட்சுமி நாராயணனுக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத நீதிபதிகளின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்துள்ளது. கூடுதல் நீதிபதிகளின் நியமணத்தால் ஒட்டுமொத்த நீதிபதிகளின் காலியிடங்கள் 17ஆக குறைந்துள்ளது.

இதையும் படிங்க: தமிழ் வளர்ச்சிக்கு கூடுதல் பல்கலைக்கழகங்கள் வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.