ETV Bharat / state

அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு தள்ளுபடி - Chennai news

சென்னை : தமிழ்நாடு வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Jun 22, 2020, 5:26 PM IST

தமிழ்நாடு வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியுடன் சேர்ந்து, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தன் நிலத்தை அபகரித்துள்ளதாகவும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும், வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரும், ஜெயப்பிரகாஷ் எனும் அவருடைய தொழில்முறை நண்பரும் முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இது தொடர்பாக முதலமைச்சருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அம்மனுவில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னதாக விசாரித்தார். அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான மாநிலத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், மனுதாரரின் புகார் குறித்து மேற்கொண்ட விசாரணையில் மனுவில் எந்தவித முகாந்திரமும் இல்லை எனத் தெரிய வந்ததாகவும், இது போன்ற மனுவை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது எனவும் வாதிட்டார்.

மேலும், ஏற்கனவே அமைச்சருக்கு எதிராக மனுதாரர் தனிப்பட்ட முறையில் நஷ்டஈடு கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் விதமாக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட சூழலில், இன்று அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : மக்களைப் பாதிக்கும் நடவடிக்கைகளை ரயில்வே துறை கைவிட வேண்டும் - வைகோ

தமிழ்நாடு வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியுடன் சேர்ந்து, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தன் நிலத்தை அபகரித்துள்ளதாகவும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும், வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரும், ஜெயப்பிரகாஷ் எனும் அவருடைய தொழில்முறை நண்பரும் முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இது தொடர்பாக முதலமைச்சருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அம்மனுவில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னதாக விசாரித்தார். அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான மாநிலத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், மனுதாரரின் புகார் குறித்து மேற்கொண்ட விசாரணையில் மனுவில் எந்தவித முகாந்திரமும் இல்லை எனத் தெரிய வந்ததாகவும், இது போன்ற மனுவை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது எனவும் வாதிட்டார்.

மேலும், ஏற்கனவே அமைச்சருக்கு எதிராக மனுதாரர் தனிப்பட்ட முறையில் நஷ்டஈடு கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் விதமாக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட சூழலில், இன்று அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : மக்களைப் பாதிக்கும் நடவடிக்கைகளை ரயில்வே துறை கைவிட வேண்டும் - வைகோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.