ETV Bharat / state

சித்த மருத்துவத்தின் மீது சந்தேகப் பார்வை ஏன்? - விளக்கமளித்த அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: சீனாவில் இருப்பதுபோல் இந்தியாவில் ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு இல்லாததே, சித்த மருத்துவத்தின் மீதான சந்தேகப் பார்வைக்கு காரணம் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jul 12, 2020, 8:20 AM IST

Updated : Jul 12, 2020, 8:54 AM IST

minister Pandiyarajan  சித்த மருத்துவம்  அமைச்சர் பாண்டியராஜன்  சித்த மருத்துவ சந்தேகப்பார்வை  ஒருங்கிணைந்த மருத்தவப் படிப்பு  pandiyarajan  minister pandiyarajan  siddha medicine
சித்த மருத்துவத்தின் மீது சந்தேகப்பார்வை: சீன நடைமுறை போல் இங்கு இல்லாததே காரணம்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சித்தா மருத்துவமனையில் உயர் அலுவலர்களுடன் அமைச்சர் பாண்டியராஜன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”தமிழ்நாட்டில் சித்த மருத்துவம் சார்பில் 35க்கும் மேற்பட்ட ஆய்வுகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஏழு ஆராய்ச்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது” என்றார்.

தமிழ்நாட்டில் சித்த மருத்துவம் மீது சந்தேகப் பார்வை ஏன், என உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், ”சீனாவில் மருத்துவ மாணவர்கள் ஓராண்டு கலாசார மருத்துவம் படிக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு இல்லாததே சந்தேகப் பார்வைக்குக் காரணம்” என்று கூறினார்.

தமிழ்நாடு அரசு சித்தாவை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகக் கூறிய பாண்டியராஜன், அதனை நிரூபிக்க உயர் நீதிமன்றமும் தங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளதாகவும் தமிழ்நாட்டில்தான் கரோனாவால் உயிரிழந்தவர்களின் விகிதம் குறைவாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், கரோனா காலத்தில் தமிழ்நாட்டில் ஜிடிபி வீழ்ச்சி குறைவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: சித்த மருத்துவத்தால் விரைவில் குணமாகும் கரோனா!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சித்தா மருத்துவமனையில் உயர் அலுவலர்களுடன் அமைச்சர் பாண்டியராஜன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”தமிழ்நாட்டில் சித்த மருத்துவம் சார்பில் 35க்கும் மேற்பட்ட ஆய்வுகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஏழு ஆராய்ச்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது” என்றார்.

தமிழ்நாட்டில் சித்த மருத்துவம் மீது சந்தேகப் பார்வை ஏன், என உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், ”சீனாவில் மருத்துவ மாணவர்கள் ஓராண்டு கலாசார மருத்துவம் படிக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு இல்லாததே சந்தேகப் பார்வைக்குக் காரணம்” என்று கூறினார்.

தமிழ்நாடு அரசு சித்தாவை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகக் கூறிய பாண்டியராஜன், அதனை நிரூபிக்க உயர் நீதிமன்றமும் தங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளதாகவும் தமிழ்நாட்டில்தான் கரோனாவால் உயிரிழந்தவர்களின் விகிதம் குறைவாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், கரோனா காலத்தில் தமிழ்நாட்டில் ஜிடிபி வீழ்ச்சி குறைவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: சித்த மருத்துவத்தால் விரைவில் குணமாகும் கரோனா!

Last Updated : Jul 12, 2020, 8:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.