கொச்சி மராடு பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறியதாக நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஜெயின் கட்டுமான நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சந்தீப் மேத்தா, தான் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஜெயின் நிறுவனத்தில் இயக்குநராக இருப்பதாகவும், கொச்சியில் உள்ள கிளை நிறுவனத்தை கவனித்து வருவதால், தன்னைக் காவல் துறை தவறான வழக்கில் கைது செய்ய முயற்சிப்பதாகவும் கூறி முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன், முதற்கட்டமாக நான்கு வாரத்திற்கு சந்தீப் மேத்தாவுக்கு முன்ஜாமின் வழங்கி கடந்த மாதம் உத்தரவிட்டார். இந்த வழக்கில் சில மாற்றங்கள் செய்யக்கோரி மனுதாரர் சார்பில் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர், கேரளாவில் செயல்பட்டுவரும் கோரல் கேவ் நிறுவனத்தின் மீதான வழக்கை மறைத்து, சந்தீப் மேத்தா முன்ஜாமின் பெற்றுள்ளார் என்பதால் அவரது முன்ஜாமினை ரத்து செய்து வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து, சந்தீப் மேத்தாவுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ’ஆம்பூர் ஸ்டார் பிரியாணி’ பெயரை பயன்படுத்த மற்ற உணவகங்களுக்குத் தடை!