ETV Bharat / state

சுபஸ்ரீ உயிரிழப்பு விவகாரம்: அதிமுக பிரமுகருக்கு சிறை!

author img

By

Published : Sep 28, 2019, 12:01 PM IST

சென்னை: சுபஸ்ரீ உயிரிழக்க காரணமான பேனரை வைத்த அதிமுக பிரமுகரை அக். 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுபஸ்ரீ

சென்னையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் வைத்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்து 15 நாட்கள் ஆகின்றன. ஆனால், பேனரை வைத்த ஜெயகோபால் கைது செய்யப்படாமல் இருந்தார். இதையடுத்து, காவல்துறைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் ஜெயகோபாலை சிபிசிஐடி காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். பின்னர், அங்கிருந்து சென்னை அழைத்து வரப்பட்ட ஜெயகோபால், இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி செர்லி, ஜெயகோபாலை அக்டோபர் 11ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டனர்.

சென்னையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் வைத்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்து 15 நாட்கள் ஆகின்றன. ஆனால், பேனரை வைத்த ஜெயகோபால் கைது செய்யப்படாமல் இருந்தார். இதையடுத்து, காவல்துறைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் ஜெயகோபாலை சிபிசிஐடி காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். பின்னர், அங்கிருந்து சென்னை அழைத்து வரப்பட்ட ஜெயகோபால், இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி செர்லி, ஜெயகோபாலை அக்டோபர் 11ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டனர்.

Intro:Body:பேனர் விழுந்த விபத்தில் சுபஸ்ரீ என்ற பெண் கடந்த 12 ஆம் தேதி பலியானார்.

இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பேனர் வைத்த அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை வேறு சிலரையும் தனிப்படை போலீசார் பல ஊர்களில் தேடிவந்தனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை சொகுசு விடுதியில் ஜெயகோபால் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று மாலை அங்குவைத்து அவரை கைது செய்தனர் தனிப்படை போலீசார்.

இன்று அதிகாலை சென்னை அழைக்கப்பட்டு வந்த அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து பரங்கிமலை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட ஜெயகோபால் பின்னர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நடுவர் செர்லி, ஜெயகோபாலை வரும் அக்டோபர் 11 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதனையடுத்து ஜெயகோபால் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜெயகோபால் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பேனர் வைக்க காண்ட்ராக்ட் எடுத்த அவரது உறவினரான மேகநாதனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

பேனர் வழக்கில் கைதான ஜெயகோபாலுக்கு அக்.11 வரை நீதிமன்ற காவல்.

ஜெயகோபாலை புழல் சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவு.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.