ETV Bharat / state

ஈராக்கின் அதிமுக்கிய குற்றவாளிகள் தென்னிந்தியாவில் தலைமறைவு - உஷாரான தமிழ்நாடு போலீஸ்!

author img

By

Published : Sep 9, 2019, 3:01 PM IST

சென்னை : ஈராக் நாட்டு குற்றவாளிகள் தென்னிந்தியாவில் தலைமறைவாகி இருப்பதாக சர்வதேச காவல் துறையினர் எச்சரித்த நிலையில் தமிழ்நாட்டில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாதவகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

iraqi-criminals-beheaded

கடந்த ஆகஸ்ட் மாதம், ஈராக் நாட்டின் பாக்தாத்தில் உள்ள அல்-குவந்த் காவல் நிலையத்திலிருந்து 12 குற்றவாளிகள் தப்பித்தனர். அதில், அதிமுக்கிய குற்றவாளிகள் இரண்டு பேர் தென்னிந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாக சர்வதேச காவல் துறை, இந்திய உளவுத் துறைக்கு எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, தென்னிந்திய உளவுத் துறை தரப்பிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து காவல் கண்காணிப்பாளர்களுக்கும் காவல் ஆணையர்களுக்கும் ஈராக் நாட்டிலிருந்து தப்பிவந்த இரண்டு குற்றவாளிகளின் புகைப்படங்கள் உள்பட அவர்களின் முழுத் தகவல்களும் கொடுக்கப்பட்டு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

ஈராக்கிலிருந்து தப்பி தென்னிந்தியாவில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளின் பெயர்கள்:

  • அல் லம்மி குஹாதான்,
  • அல்ஷாவய்லி சதீக்

இவர்கள் இருவரும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்ததாகவும் உளவுத் துறையினர் கூறியுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு காவல் துறையினர், "ஈராக் நாட்டு குற்றவாளிகளால் தமிழ்நாட்டில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" எனத் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம், ஈராக் நாட்டின் பாக்தாத்தில் உள்ள அல்-குவந்த் காவல் நிலையத்திலிருந்து 12 குற்றவாளிகள் தப்பித்தனர். அதில், அதிமுக்கிய குற்றவாளிகள் இரண்டு பேர் தென்னிந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாக சர்வதேச காவல் துறை, இந்திய உளவுத் துறைக்கு எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, தென்னிந்திய உளவுத் துறை தரப்பிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து காவல் கண்காணிப்பாளர்களுக்கும் காவல் ஆணையர்களுக்கும் ஈராக் நாட்டிலிருந்து தப்பிவந்த இரண்டு குற்றவாளிகளின் புகைப்படங்கள் உள்பட அவர்களின் முழுத் தகவல்களும் கொடுக்கப்பட்டு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

ஈராக்கிலிருந்து தப்பி தென்னிந்தியாவில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளின் பெயர்கள்:

  • அல் லம்மி குஹாதான்,
  • அல்ஷாவய்லி சதீக்

இவர்கள் இருவரும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்ததாகவும் உளவுத் துறையினர் கூறியுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு காவல் துறையினர், "ஈராக் நாட்டு குற்றவாளிகளால் தமிழ்நாட்டில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" எனத் தெரிவித்துள்ளனர்.

Intro:Body:ஈராக் நாட்டு குற்றவாளிகள் தென்னிந்தியாவில் தலைமறைவாகி இருப்பதாக இண்டர்போல் அதிகாரிகள் தமிழக உளவுத்துறையை எச்சரித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் முதல் வாரம் ஈராக் நாட்டில் உள்ள பாக்தாத்தில் ,அல்-குவந்த் காவல் நிலையத்தில் இருந்து இரண்டு குற்றவாளிகள்,12 பேருடன் தப்பியுள்ளனர். குறிப்பாக முக்கிய குற்றவாளிகள் 2பேர் தென்னிந்தியாவில் நுழைந்துள்ளதாக சர்வதேச போலிசாரான இண்டர்போல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இண்டர்போல் அதிகாரிகள் தென்னிந்தியாவில் உள்ள உளவுதுறைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எஸ்.பி மற்றும் கமிஷனர்களுக்கும் தப்பி வந்த இரண்டு குற்றவாளிகள் படத்துடன் முழு தகவல்கள் கொடுக்கபட்டுள்ளது.இவர்களது பெயர் அல் லம்மி குஹாதான் மற்றும் அல் ஷாவய்லி சதீக் என்றும்,போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக இவர்களோடு தப்பி வந்த 12 பேரை தனிப்படை போலிசார் ஈராக்கில் போலிசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளிகளான இருவருக்கும் எதிராக இண்டர்போல் அதிகாரிகள் ஆரஞ்ச் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.இவர்கள் தப்பிக்க உதவிய ஈராக் போலிசாரை,அந்நாட்டு அரசு பணி நீக்கம் செய்துள்ளது.

ஈராக் நாட்டு குற்றவாளிகளால் தமிழகத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழக போலிசார் தெரிவுத்துள்ளனர். ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டு ஐஎஸ் தீவிரவாதிகள் தமிழகத்தில் நுழைந்துள்ளதாக உச்சகட்ட கண்காணிப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. தற்போது ஈராக் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளும் ஊடுருவி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.