ETV Bharat / state

சிறுவனின் உயிரை பறித்த மாஞ்சா நூல்: நால்வரிடம் விசாரணை... 2 பேர் கைது!

author img

By

Published : Nov 4, 2019, 2:26 PM IST

சென்னை : கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் மாஞ்சா நூலால் கழுத்தறுக்கப்பட்டு உயிரிழந்த மூன்று வயது சிறுவன் குறித்த விவகாரத்தில் காவல் துறையினர் நான்கு பேரிடம் விசாரணை நடத்தியதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நாகராஜ்

சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் அபினேஷ்வர் ராவ். இவர்கள் இருவரும் நேற்று மாலை 5 மணிக்கு தண்டையார்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் மாஞ்சா நூல் ஒன்று சிறுவனின் கழுத்தில் சிக்கியது. இதில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சிறுவன் ரத்தவெள்ளத்தில் துடித்துள்ளார். உடனடியாக அவனுடைய தந்தை கோபால் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார். இது குறித்து ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

கைது செய்யப்பட்ட நாகராஜ்
கைது செய்யப்பட்ட நாகராஜ்

கொருக்குப்பேட்டை காமராஜர் நகரில் வசிக்கும் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர் நாகராஜ், கொருக்குப்பேட்டை சாஸ்திரி நகரில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன், தண்டையார்பேட்டை நேரு நகரில் வசிக்கும் தனியார் வங்கியின் கலக்‌ஷன் ஏஜெண்ட் லோகேஷ், தண்டையார்பேட்டை குமரன் நகரில் வசிக்கும் 65 வயது முதியவர் லோகநாதன் ஆகிய நான்கு பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் நாகராஜ், 15 வயது சிறுவன் ஆகிய இருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : தண்ணீர் கேனில் தவறி விழுந்த மூன்று வயதுக் குழந்தை உயிரிழப்பு

சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் அபினேஷ்வர் ராவ். இவர்கள் இருவரும் நேற்று மாலை 5 மணிக்கு தண்டையார்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் மாஞ்சா நூல் ஒன்று சிறுவனின் கழுத்தில் சிக்கியது. இதில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சிறுவன் ரத்தவெள்ளத்தில் துடித்துள்ளார். உடனடியாக அவனுடைய தந்தை கோபால் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார். இது குறித்து ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

கைது செய்யப்பட்ட நாகராஜ்
கைது செய்யப்பட்ட நாகராஜ்

கொருக்குப்பேட்டை காமராஜர் நகரில் வசிக்கும் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர் நாகராஜ், கொருக்குப்பேட்டை சாஸ்திரி நகரில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன், தண்டையார்பேட்டை நேரு நகரில் வசிக்கும் தனியார் வங்கியின் கலக்‌ஷன் ஏஜெண்ட் லோகேஷ், தண்டையார்பேட்டை குமரன் நகரில் வசிக்கும் 65 வயது முதியவர் லோகநாதன் ஆகிய நான்கு பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் நாகராஜ், 15 வயது சிறுவன் ஆகிய இருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : தண்ணீர் கேனில் தவறி விழுந்த மூன்று வயதுக் குழந்தை உயிரிழப்பு

Intro:Body:சென்னையில் மாஞ்சா நூலால் 3 வயது சிறுவன் உயிரிழப்பு விவகாரத்தில்.4பேரிடம் விசாரணை

சென்னை கொருக்குப்பேட்டையில் 3 வயது சிறுவன் மாஞ்சா நூலால் கழுத்து அறுக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்..

சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோபால் அவருடைய மகன் அபினேஷ்வர் ராவ் வயது 3.

இவர்கள் இருவரும் தண்டையார் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் தன்னுடைய இருச்சக்கர வாகனத்தில் சென்று வரும் வழியில் கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் மாஞ்சா நூல் சிறுவனின் கழுத்தில் சிக்கியது. அப்போது சிறுவன் ரத்தவெள்ளத்தில் துடித்து உள்ளார். உடனடியாக அவனுடைய தந்தை கோபால் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மாலை 5 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தற்போது சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான். இதுகுறித்து ஆர்கே நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


கொருக்குப்பேட்டை காமராஜர் நகரில் வசிக்கும் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படிக்கும் மாணவர் நாகராஜ் கொருக்குப்பேட்டை சாஸ்திரி நகரில் வசிக்கும் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன், தண்டையார்பேட்டை, நேரு நகரில் வசிக்கும் தனியார் வங்கியின் கலக்‌ஷன் ஏஜெண்ட் லோகேஷ் தண்டையார்ப்பேட்டை குமரன் நகரில் வசிக்கும் 65 வயது முதியவர் லோகநாதன் ஆகிய 4 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் நாகராஜ் மற்றும் 15வயது சிறுவன் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.