ETV Bharat / state

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

author img

By

Published : May 28, 2021, 11:15 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் தினந்தோறும் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை சைதாப்பேட்டையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2 ஆயிரத்து 386 நோயாளிகளுக்கு மூன்று வேளை உணவு வழங்கும் புதிய திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (மே 28) தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “கோயம்புத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது என்பது உண்மை தான். அந்த மாவட்டத்தில் இருக்கின்ற அதிகமான தொழிற்சாலைகளிலுள்ள தொழிலாளர்கள், வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் ஆகியோர்களை கண்காணிப்பு செய்வதில் பெரும் சிக்கல் இருக்கிறது.

இருந்தபோதிலும், தற்போது அந்த மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

தொடர்ந்து, “சென்னையில் படுக்கை தட்டுபாடு என்ற நிலையே தற்போது இல்லை. சுமார் 8 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன. வீட்டு தனிமையிலுள்ள நபர்களையும் கரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்து வரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் தினந்தோறும் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்காக இதுவரை 14 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 3 நாள்களில் கிராமபுரங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 80 லட்சம் தடுப்பூசிகளில் 78 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும், உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசி வாங்குவதற்கான படிவங்கள் தொடர்ச்சியாக விற்பனையாகி வருவதாகவும் வரும் ஜுன் 6ஆம் தேதி எந்த நிறுவனம் மூலம் தடுப்பூசி பெறுகிறோம் என்று தெரிய வரும். இதனால் சிக்கல் ஏதும் இல்லை என்றார்.

இதையும் படிங்க்: சென்னையில் கரோனா பரவல் விகிதம் 12.1% ஆக குறைந்தது!

சென்னை சைதாப்பேட்டையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2 ஆயிரத்து 386 நோயாளிகளுக்கு மூன்று வேளை உணவு வழங்கும் புதிய திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (மே 28) தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “கோயம்புத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது என்பது உண்மை தான். அந்த மாவட்டத்தில் இருக்கின்ற அதிகமான தொழிற்சாலைகளிலுள்ள தொழிலாளர்கள், வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் ஆகியோர்களை கண்காணிப்பு செய்வதில் பெரும் சிக்கல் இருக்கிறது.

இருந்தபோதிலும், தற்போது அந்த மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

தொடர்ந்து, “சென்னையில் படுக்கை தட்டுபாடு என்ற நிலையே தற்போது இல்லை. சுமார் 8 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன. வீட்டு தனிமையிலுள்ள நபர்களையும் கரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்து வரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் தினந்தோறும் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்காக இதுவரை 14 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 3 நாள்களில் கிராமபுரங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 80 லட்சம் தடுப்பூசிகளில் 78 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும், உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசி வாங்குவதற்கான படிவங்கள் தொடர்ச்சியாக விற்பனையாகி வருவதாகவும் வரும் ஜுன் 6ஆம் தேதி எந்த நிறுவனம் மூலம் தடுப்பூசி பெறுகிறோம் என்று தெரிய வரும். இதனால் சிக்கல் ஏதும் இல்லை என்றார்.

இதையும் படிங்க்: சென்னையில் கரோனா பரவல் விகிதம் 12.1% ஆக குறைந்தது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.