ETV Bharat / state

தனியார் நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

author img

By

Published : Mar 28, 2021, 7:26 AM IST

சென்னை: தி நகரில் உள்ள பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

IT
IT

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அறவிக்கப்பட்டதை அடுத்து வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் கொடுப்பதை தடுப்பதற்காகவும் பணப் பரிமாற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கவும் வருமான வரித்துறையினர் சார்பில் சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த குழுவானது கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரமுகர்களின் வீடு, தனியார் நிதி நிறுவனங்கள், தொழிலதிபர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தி.நகரில் தர்மபுரியைச் சேர்ந்த டி.சி.இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் வரி ஏய்ப்பு அல்லது வேறு ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை செய்யவே இந்த சோதனை நடைப்பெற்றதாக வருமான வரித்துறையினர் தெரவித்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அறவிக்கப்பட்டதை அடுத்து வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் கொடுப்பதை தடுப்பதற்காகவும் பணப் பரிமாற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கவும் வருமான வரித்துறையினர் சார்பில் சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த குழுவானது கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரமுகர்களின் வீடு, தனியார் நிதி நிறுவனங்கள், தொழிலதிபர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தி.நகரில் தர்மபுரியைச் சேர்ந்த டி.சி.இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் வரி ஏய்ப்பு அல்லது வேறு ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை செய்யவே இந்த சோதனை நடைப்பெற்றதாக வருமான வரித்துறையினர் தெரவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.