ETV Bharat / state

அமைச்சரவை கூட்டம் : தமிழ்நாட்டில் ஐந்து தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி?

author img

By

Published : May 2, 2023, 7:55 PM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், பெட்ரோனஸ், காட்டர்பில்லர் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் கூடுதலாக முதலீடுகள் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

cabinet
முதலமைச்சர்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் முத்திரைத்தாள் திருத்த சட்ட மசோதா, நில ஒருங்கிணைப்பு மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல் துறைவாரியாக பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மே.2) முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில், பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதை செயல்படுத்தும் முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. திட்டங்களை முறையாகவும், விரைவாகவும் செயல்படுத்த வேண்டும் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

மேலும், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வெளிநாடு பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெட்ரோனஸ், கேட்டர்பில்லர் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, குடியரசுத் தலைவர் வருகை, மதுரை நூலகம் திறப்பு விழா மற்றும் திருவாரூரில் நடைபெற உள்ள விழாக்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 35-க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் முத்திரைத்தாள் திருத்த சட்ட மசோதா, நில ஒருங்கிணைப்பு மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல் துறைவாரியாக பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மே.2) முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில், பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதை செயல்படுத்தும் முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. திட்டங்களை முறையாகவும், விரைவாகவும் செயல்படுத்த வேண்டும் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

மேலும், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வெளிநாடு பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெட்ரோனஸ், கேட்டர்பில்லர் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, குடியரசுத் தலைவர் வருகை, மதுரை நூலகம் திறப்பு விழா மற்றும் திருவாரூரில் நடைபெற உள்ள விழாக்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 35-க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.