ETV Bharat / state

11, 12ஆம் வகுப்பு செய்முறைத்தேர்வு நாளை தொடக்கம் - HSE Practical Exam begins tomorrow

11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நாளை (ஏப்.24) தொடங்கி மே 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவுள்ளனர்.

s
s
author img

By

Published : Apr 24, 2022, 6:32 PM IST

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரையும், 11ஆம் வகுப்பிற்கு மே 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.

11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 25ஆம் தேதி(நாளை) முதல் மே 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இரண்டு கட்டங்களாக நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் மூன்று மணிநேரமாக இருந்த செய்முறை பொதுத்தேர்வுக்கான கால நேரம் இரண்டு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு பிரிவுக்கு 30 மாணவர்கள் வரையில் அனுமதிக்கப்படுகின்றனர். 30 மதிப்பெண்களுக்கு நடைபெறும் செய்முறைத்தேர்வில் 20 மதிப்பெண்கள் செய்முறைத்தேர்வுக்கும் 10 மதிப்பெண்கள் அக மதிப்பீடாகவும் வழங்கப்படும்.
காலை 8 மணி முதல் செய்முறைத்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. செய்முறைத்தேர்வினை சுமார் 5 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என இருமாெழிக் கொள்கை தான்..!' - பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரையும், 11ஆம் வகுப்பிற்கு மே 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.

11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 25ஆம் தேதி(நாளை) முதல் மே 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இரண்டு கட்டங்களாக நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் மூன்று மணிநேரமாக இருந்த செய்முறை பொதுத்தேர்வுக்கான கால நேரம் இரண்டு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு பிரிவுக்கு 30 மாணவர்கள் வரையில் அனுமதிக்கப்படுகின்றனர். 30 மதிப்பெண்களுக்கு நடைபெறும் செய்முறைத்தேர்வில் 20 மதிப்பெண்கள் செய்முறைத்தேர்வுக்கும் 10 மதிப்பெண்கள் அக மதிப்பீடாகவும் வழங்கப்படும்.
காலை 8 மணி முதல் செய்முறைத்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. செய்முறைத்தேர்வினை சுமார் 5 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என இருமாெழிக் கொள்கை தான்..!' - பள்ளிக்கல்வித்துறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.