ETV Bharat / state

‘குறைவான விலையில் வீடுகள் கட்டித்தரப்படும்’ - ஓபிஎஸ்

author img

By

Published : Sep 30, 2019, 11:44 PM IST

சென்னை: தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலையைக் காட்டிலும் குறைவான, வெளிப்படையான விலையில் மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

Houses will be built for less expensive - Deputy Chief Minister

இட நெருக்கடியை குறைக்கும் விதமாக பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியில் ஒரு துணைக்கோள் நகரம் உருவாக்கப்படுமென முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் திருமழிசையில் 311 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 121 ஏக்கர் நிலங்களில் தற்போது முதற்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனை பார்வையிட்ட துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது, தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலையைக் காட்டிலும் வெளிப்படையாகவும் சாமானிய மக்களால் பயன்படுத்தக்கூடிய அளவிலும் வீடுகளுக்கான விலைநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி வழியாக புதிய சாலைகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன என்றார்.

ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு

நிலம் கையகப்படுத்தலில் சில சிக்கல்கள் இருந்ததாலேயே துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான காலதாமதம் ஆனதாக குறிப்பிட்டுள்ளார். நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து பாஜக - அதிமுகவின் கூட்டணி நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. இனிவரும் காலங்களிலும் நீடிக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் தமிழ்மொழி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு டிஎன்பிஎஸ்சி அமைப்பு அளித்த விளக்கமே போதுமானது என்று கூறிய அவர், தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்பதனை நிரூபிக்கும் வகையிலே கீழடியின் கண்டுபிடிப்புகள் உள்ளதாகவும் ஓபிஎஸ் கூறினார்.

இட நெருக்கடியை குறைக்கும் விதமாக பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியில் ஒரு துணைக்கோள் நகரம் உருவாக்கப்படுமென முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் திருமழிசையில் 311 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 121 ஏக்கர் நிலங்களில் தற்போது முதற்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனை பார்வையிட்ட துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது, தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலையைக் காட்டிலும் வெளிப்படையாகவும் சாமானிய மக்களால் பயன்படுத்தக்கூடிய அளவிலும் வீடுகளுக்கான விலைநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி வழியாக புதிய சாலைகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன என்றார்.

ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு

நிலம் கையகப்படுத்தலில் சில சிக்கல்கள் இருந்ததாலேயே துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான காலதாமதம் ஆனதாக குறிப்பிட்டுள்ளார். நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து பாஜக - அதிமுகவின் கூட்டணி நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. இனிவரும் காலங்களிலும் நீடிக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் தமிழ்மொழி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு டிஎன்பிஎஸ்சி அமைப்பு அளித்த விளக்கமே போதுமானது என்று கூறிய அவர், தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்பதனை நிரூபிக்கும் வகையிலே கீழடியின் கண்டுபிடிப்புகள் உள்ளதாகவும் ஓபிஎஸ் கூறினார்.

Intro:மத்திய அரசு தமிழுக்கு எதிராக செயல்படவில்லை திருமழிசை துணைக்கோள் நகரத்தை பார்வையிட்டபின் துணை முதல்வர் பேட்டி


Body:பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியில் உள்ள துணைக்கோள் நகரம் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் உருவாகி வருகிறது.இதன் முதல்கட்ட பணிகள் குறித்து ஆய்வினை தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் பார்வையிட்டார் முதல்கட்டமாக 122 ஏக்கர் பரப்பளவில் கட்டிடங்கள் கட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


Conclusion:ஆய்வுகளுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் அதிமுக பாஜக கூட்டணி 2019 தேர்தலை போன்றே தொடர்கின்றது எனவும்.இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமருடனான சந்திப்பில் அரசியல் குறித்து ஏதும் பேசவில்லை எனவும் அவர் பட்டமளிப்பு விழாவினை முடித்து சென்றுள்ளார்.மேலும tnpsc தேர்வில் தமிழ் புரகணிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு மத்திய அரசு தமிழுக்கு எதிராக செயல்படவில்லை எனவும் தமிழ் தொன்மையான மொழி அதனை கிழடி நிரூபிப்பதாக கூறியுள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.