ETV Bharat / state

பெண்ணுடன் தனிமையில் இருந்தவரை மிரட்டி பணம், நகைகள் பறித்த ஊர்க்காவல் படை வீரர் கைது!

author img

By

Published : Aug 12, 2023, 12:46 PM IST

போலீஸ் எனக்கூறி பெண்ணுடன் தனிமையில் இருந்தவரை மிரட்டி 92 ஆயிரம் பணம் மற்றும் 4 கிராம் தங்கம் பறித்த முன்னாள் ஊர்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

Etv Bharat
Etv Bharat

சென்னை: முகப்பேரை சேர்ந்தவர் மணிகண்டன்(30). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் மணிகண்டன், கடந்த 27ஆம் தேதி கோயம்பேட்டில் ஒரு பெண்ணுடன் சென்று வீடு திரும்பிய போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மணிகண்டனை வழிமறித்து உள்ளார்.

பின்னர் தான் போலீஸ் எனக் கூறி அந்த நபர் ஐடி கார்டை காண்பித்து, நீ பெண்ணுடன் சென்று வந்ததை உனது பெற்றோரிடம் கூறி விடுவேன் எனவும், சட்ட விரோத செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி மணிகண்டனை மிரட்டியுள்ளார். பின்னர் சட்ட விரோத செயலுக்கான அபராத தொகையை செலுத்துமாறு அவரது ஜிபே எண்ணுக்கு 15 ஆயிரம் ரூபாய் அனுப்பி விட்டு அழைக்கும் போது வர வேண்டும் என அந்த நபர் மணிகண்டனிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதனை அடுத்து மறுநாள் மீண்டும் அந்த நபர் மணிகண்டனை சந்திக்க வேண்டும் என அழைத்து உயர் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என 65 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். இதே போல பல தவணைகளில் 92 ஆயிரம் பணம் மற்றும் நான்கு கிராம் தங்க நகையை அந்த நபர் மணிகண்டனிடமிருந்து மிரட்டி பறித்துள்ளார்.

தொடர்ச்சியாக பணம் கேட்டு அந்த நபர் மிரட்டி வந்ததால் சந்தேகம் அடைந்த மணிகண்டன் சூளைமேடு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அந்த நபர் வந்த இருசக்கர வாகன எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, சூளைமேட்டில் வசித்து வரும் பெண் காவலரின் இருசக்கர வாகனம் என்பது தெரிய வந்துள்ளது.

பின்னர் பெண் காவலரிடம் விசாரணை நடத்திய போது, பணம் பறிப்பில் ஈடுபட்ட நபர் பாலாஜி என்பதும் இவரை இரண்டு ஆண்டுகளாக தான் காதலித்து வருவதாகவும், தற்போது ஒன்றாக வசித்து வருவதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து பணப்பறிப்பில் ஈடுபட்ட பாலாஜி (28) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் எம்.பி.ஏ பட்டதாரியான பாலாஜி கடந்த 2016ஆம் ஆண்டு ஊர்காவல் படையில் பணிக்கு சேர்ந்து பின்னர் வேலையை விட்டு நின்றுள்ளார்.

அப்போது பெண் காவலருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாலாஜி பல இடங்களில் தேடியும் வேலை கிடைக்காத விரக்தியில் போலீஸ் எனக்கூறி பணப்பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் ரம்மி ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் கொண்ட பாலாஜி பணப்பறிப்பில் ஈடுபட்ட 92 ஆயிரம் பணத்தை விளையாட்டில் இழந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 4 கிராம் நகையை அடகு கடையில் வைத்திருப்பது தெரிய வந்ததை அடுத்து போலீசார் அதை மீட்டனர்.

பின்னர் பாலாஜியை மீது அரசு ஊழியர் என பொய்யாக பெயரை பயன்படுத்துதல், மிரட்டல், பணம் பறித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நாங்குநேரி சாதி மோதல் விவகாரம்.. மாணவர்கள் சாதிய வேற்றுமை குறித்து தமிழிசை சௌந்தரராஜன் வேதனை!..

சென்னை: முகப்பேரை சேர்ந்தவர் மணிகண்டன்(30). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் மணிகண்டன், கடந்த 27ஆம் தேதி கோயம்பேட்டில் ஒரு பெண்ணுடன் சென்று வீடு திரும்பிய போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மணிகண்டனை வழிமறித்து உள்ளார்.

பின்னர் தான் போலீஸ் எனக் கூறி அந்த நபர் ஐடி கார்டை காண்பித்து, நீ பெண்ணுடன் சென்று வந்ததை உனது பெற்றோரிடம் கூறி விடுவேன் எனவும், சட்ட விரோத செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி மணிகண்டனை மிரட்டியுள்ளார். பின்னர் சட்ட விரோத செயலுக்கான அபராத தொகையை செலுத்துமாறு அவரது ஜிபே எண்ணுக்கு 15 ஆயிரம் ரூபாய் அனுப்பி விட்டு அழைக்கும் போது வர வேண்டும் என அந்த நபர் மணிகண்டனிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதனை அடுத்து மறுநாள் மீண்டும் அந்த நபர் மணிகண்டனை சந்திக்க வேண்டும் என அழைத்து உயர் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என 65 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். இதே போல பல தவணைகளில் 92 ஆயிரம் பணம் மற்றும் நான்கு கிராம் தங்க நகையை அந்த நபர் மணிகண்டனிடமிருந்து மிரட்டி பறித்துள்ளார்.

தொடர்ச்சியாக பணம் கேட்டு அந்த நபர் மிரட்டி வந்ததால் சந்தேகம் அடைந்த மணிகண்டன் சூளைமேடு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அந்த நபர் வந்த இருசக்கர வாகன எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, சூளைமேட்டில் வசித்து வரும் பெண் காவலரின் இருசக்கர வாகனம் என்பது தெரிய வந்துள்ளது.

பின்னர் பெண் காவலரிடம் விசாரணை நடத்திய போது, பணம் பறிப்பில் ஈடுபட்ட நபர் பாலாஜி என்பதும் இவரை இரண்டு ஆண்டுகளாக தான் காதலித்து வருவதாகவும், தற்போது ஒன்றாக வசித்து வருவதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து பணப்பறிப்பில் ஈடுபட்ட பாலாஜி (28) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் எம்.பி.ஏ பட்டதாரியான பாலாஜி கடந்த 2016ஆம் ஆண்டு ஊர்காவல் படையில் பணிக்கு சேர்ந்து பின்னர் வேலையை விட்டு நின்றுள்ளார்.

அப்போது பெண் காவலருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாலாஜி பல இடங்களில் தேடியும் வேலை கிடைக்காத விரக்தியில் போலீஸ் எனக்கூறி பணப்பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் ரம்மி ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் கொண்ட பாலாஜி பணப்பறிப்பில் ஈடுபட்ட 92 ஆயிரம் பணத்தை விளையாட்டில் இழந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 4 கிராம் நகையை அடகு கடையில் வைத்திருப்பது தெரிய வந்ததை அடுத்து போலீசார் அதை மீட்டனர்.

பின்னர் பாலாஜியை மீது அரசு ஊழியர் என பொய்யாக பெயரை பயன்படுத்துதல், மிரட்டல், பணம் பறித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நாங்குநேரி சாதி மோதல் விவகாரம்.. மாணவர்கள் சாதிய வேற்றுமை குறித்து தமிழிசை சௌந்தரராஜன் வேதனை!..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.