ETV Bharat / state

"சூர்யா 42" படத்தின் இந்தி உரிமை ரூ.100 கோடிக்கு விற்பனை?!

author img

By

Published : Jan 3, 2023, 6:24 PM IST

சூர்யா தற்போது நடித்துவரும் சூர்யா 42 படத்தின் இந்தி உரிமை ரூ.100 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியில் ரூ.100 கோடிக்கு விற்பனையான முதல் தமிழ்படம் என்ற சாதனையை இந்த படம் படைத்துள்ளது.

"சூர்யா 42" படத்தின் இந்தி உரிமை ரூ.100 கோடிக்கு விற்பனை..!
"சூர்யா 42" படத்தின் இந்தி உரிமை ரூ.100 கோடிக்கு விற்பனை..!

சென்னை: சிவா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத அந்தப் படம் தற்காலிகமாக 'சூர்யா 42' என்று அழைக்கப்படுகிறது. அந்தப் படத்தில் திஷா பதானி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

3டி தொழில்நுட்பத்தில் வரலாற்றுப் படமாக இது உருவாகி வருகிறது. இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு நாளை சென்னையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தை மார்ச் மாதத்திற்குள் முடித்து இந்த ஆண்டே வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

பாலாவின் ’வணங்கான்’ படத்தில் இருந்து விலகிய சூர்யா, இப்படத்தில் மிக ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் இந்தி வெளியீட்டு உரிமை ரூ. 100 கோடிக்கு விலைபோகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பென் ஸ்டூடியோஸ் இந்த விலை கொடுத்து இப்படத்தின் திரையரங்கு உரிமை, சாட்டிலைட், டிஜிட்டல் எல்லாம் சேர்த்து ரூ.100 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியில் ரூ.100 கோடிக்கு விலைபோன முதல் தமிழ் படம் என்ற சாதனையை இப்படம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் சூர்யா இணைவார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வாரிசு, துணிவு படங்களுக்கு சென்சார் ரெடி - வாரிசை விட துணிவுக்கு அதிக கட்!

சென்னை: சிவா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத அந்தப் படம் தற்காலிகமாக 'சூர்யா 42' என்று அழைக்கப்படுகிறது. அந்தப் படத்தில் திஷா பதானி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

3டி தொழில்நுட்பத்தில் வரலாற்றுப் படமாக இது உருவாகி வருகிறது. இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு நாளை சென்னையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தை மார்ச் மாதத்திற்குள் முடித்து இந்த ஆண்டே வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

பாலாவின் ’வணங்கான்’ படத்தில் இருந்து விலகிய சூர்யா, இப்படத்தில் மிக ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் இந்தி வெளியீட்டு உரிமை ரூ. 100 கோடிக்கு விலைபோகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பென் ஸ்டூடியோஸ் இந்த விலை கொடுத்து இப்படத்தின் திரையரங்கு உரிமை, சாட்டிலைட், டிஜிட்டல் எல்லாம் சேர்த்து ரூ.100 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியில் ரூ.100 கோடிக்கு விலைபோன முதல் தமிழ் படம் என்ற சாதனையை இப்படம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் சூர்யா இணைவார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வாரிசு, துணிவு படங்களுக்கு சென்சார் ரெடி - வாரிசை விட துணிவுக்கு அதிக கட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.