ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எப்போது சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து? அமைச்சர் தகவல்

author img

By

Published : Sep 20, 2019, 4:17 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு பல்கலைக்கழகத்திற்கான அந்தஸ்தினை பெறுவதற்கான நிதி அளிப்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்த பின்னர் அறிவிப்போம் என அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

kp anbalagan

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 18ஆவது தமிழ் இணைய மாநாடு நடைபெற்றுவருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இணையத் தமிழை மேம்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பதினெட்டாவது தமிழ் இணைய மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் பாண்டியராஜன் சிறப்புரை வழங்கினார். தமிழிணைய மாநாட்டு மலரையும், தமிழ் இணைய பல்கலைக்கழகம் உருவாக்கியிருந்த செயலியையும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி. அன்பழகன், “பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஆர்வமில்லை என கூறுகிறீர்கள். ஆனால் உண்மை நிலை அதுவல்ல. இந்த ஆண்டும் ஒரு லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். அதேபோல், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் அதிகளவில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். வழக்கம்போல் மாணவர்கள் சேர்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

கே.பி. அன்பழகன் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாட்டில் உள்ள ஐந்து பல்கலைக்கழகங்கள் சீர்மிகு பல்கலைக்கழகம் அந்தஸ்து வேண்டும் என விண்ணப்பம் செய்துள்ளது. அதில் முதல்கட்டமாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு பல்கலைக்கழகம் அந்தஸ்து அளிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனை எவ்வாறு வழங்குவார்கள் என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.

அந்த ஆய்வு முடிந்த பின்னர் அதுகுறித்து அறிவிக்கப்படும். தமிழ்நாடு அரசு உயர்கல்வியில் பயிலும் மாணவர்களின் மேம்பாட்டிற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு எப்பொழுதும் தயாராக உள்ளது. எனவே எந்த விதத்திலும் இவர்களுக்கான நிதி வழங்குவதில் தடையில்லை. சீர்மிகு பல்கலைக்கழகம் அந்தஸ்து பெறுவதில் உள்ள பயன்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் தகவல்கள் அளிக்கப்படும்” என்றார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 18ஆவது தமிழ் இணைய மாநாடு நடைபெற்றுவருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இணையத் தமிழை மேம்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பதினெட்டாவது தமிழ் இணைய மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் பாண்டியராஜன் சிறப்புரை வழங்கினார். தமிழிணைய மாநாட்டு மலரையும், தமிழ் இணைய பல்கலைக்கழகம் உருவாக்கியிருந்த செயலியையும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி. அன்பழகன், “பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஆர்வமில்லை என கூறுகிறீர்கள். ஆனால் உண்மை நிலை அதுவல்ல. இந்த ஆண்டும் ஒரு லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். அதேபோல், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் அதிகளவில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். வழக்கம்போல் மாணவர்கள் சேர்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

கே.பி. அன்பழகன் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாட்டில் உள்ள ஐந்து பல்கலைக்கழகங்கள் சீர்மிகு பல்கலைக்கழகம் அந்தஸ்து வேண்டும் என விண்ணப்பம் செய்துள்ளது. அதில் முதல்கட்டமாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு பல்கலைக்கழகம் அந்தஸ்து அளிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனை எவ்வாறு வழங்குவார்கள் என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.

அந்த ஆய்வு முடிந்த பின்னர் அதுகுறித்து அறிவிக்கப்படும். தமிழ்நாடு அரசு உயர்கல்வியில் பயிலும் மாணவர்களின் மேம்பாட்டிற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு எப்பொழுதும் தயாராக உள்ளது. எனவே எந்த விதத்திலும் இவர்களுக்கான நிதி வழங்குவதில் தடையில்லை. சீர்மிகு பல்கலைக்கழகம் அந்தஸ்து பெறுவதில் உள்ள பயன்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் தகவல்கள் அளிக்கப்படும்” என்றார்.

Intro:சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து குறித்து
முழுமையாக ஆய்வு செய்து அறிவிப்போம்





Body:சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து குறித்து
முழுமையாக ஆய்வு செய்து அறிவிப்போம்


சென்னை,
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு பல்கலைக்கழகத்திற்கு அந்தஸ்தினை பெறுவதற்கான நிதி அளிப்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்த பின்னர் அறிவிப்போம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி .அன்பழகன் தெரிவித்தார்.


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 18வது தமிழ் இணைய மாநாடு நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டில் இணையத் தமிழை மேம்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.


பதினெட்டாவது தமிழ் இணைய மாநாட்டில் துவக்க விழாவில் கலந்துகொண்டு தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் சிறப்புரை வழங்கினார். தமிழிணைய மாநாட்டு மலரையும், தமிழ் இணைய பல்கலைக்கழகம் உருவாக்கியிருந்த அப்ளிகேசனையும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், அண்ணா பல்கலைகழகத்தில் பி.இ.படிப்பில் மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தமிழ் வழியில் தொடங்கப்பட்டது. தற்பொழுது அதில் சேருவதற்கு மாணவர்களின் விருப்பம் குறைவாக உள்ளதால், தமிழ்வழி படிப்புகளின் எண்ணிக்கை இடங்களை குறைத்து அதை பிற பிரிவுகளுக்கு அதிகரித்து அதில் மாணவர்களை சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஏன் ஆர்வமில்லை என்பது குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.
பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஆர்வமில்லை என கூறுகிறீர்கள். ஆனால் உண்மை நிலை அதுவல்ல. இந்த ஆண்டும் ஒரு லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். அதேபோல் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் அதிகளவில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
வழக்கம்போல் மாணவர்கள் சேர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள ஐந்து பல்கலைக்கழகங்கள் சீர்மிகு பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வேண்டும் என விண்ணப்பம் செய்தது. அதில் முதல்கட்டமாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு பல்கலைகழகம் அந்தஸ்து அளிக்க மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சீர்மிகு பல்கலைக்கழகம் அந்தஸ்தினை பெறும் மத்திய அரசு அதற்கான தொகையை எவ்வளவு அளிப்பார்கள் தமிழக அரசு எவ்வளவு அளிக்க வேண்டும் என்பது குறித்தும், இதனை எவ்வாறு வழங்குவார்கள் என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். அந்த ஆய்வு முடிவு பெற்றபின்னர் அதுகுறித்து அறிவிக்கப்படும்.
தமிழக அரசு உயர் கல்வியில் பயிலும் மாணவர்களின் மேம்பாட்டிற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு எப்பொழுதும் தயாராக உள்ளது. எனவே எந்த விதத்திலும் இவர்களுக்கான நிதி வழங்குவதில் தடையில்லை. சீர்மிகு பல்கலைகழகம் அந்தஸ்து பெறுவதில் உள்ள பயன்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் தகவல்கள் அளிக்கப்படும் என தெரிவித்தார்.







Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.