ETV Bharat / state

'பள்ளிகள் திறப்புக்கு முன்பே ஆசிரியர்களுக்கு 100% தடுப்பூசி!'

author img

By

Published : Aug 27, 2021, 1:44 PM IST

பள்ளிகள் திறப்பதற்கு முன்னர்  100 விழுக்காடு ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சு
அமைச்சர் மா.சு

தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பள்ளிக்கூட பணியாளர்கள், ஆசிரியர்களின் குடும்பத்தாருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம், சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஆகஸ்ட் 27) தொடங்கியது.

இந்த முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டு தொடங்கிவைத்தனர்.

vaccine
ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி முகாம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்பிரமணியன், "சென்னையில் ஆசிரியர் அல்லாத பள்ளிக்கூட பணியாளர்களில் 89.32 விழுக்காடு நபர்களுக்கும், ஆசிரியர்களில் 90.11 விழுக்காடு நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் 100 விழுக்காடு ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலை ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் அரசு சார்பில் இதுவரை இரண்டு கோடியே 81 லட்சத்து 31 ஆயிரத்து 409 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கும் என மொத்தமாக மூன்று கோடியே ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 410 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்களுக்கு 100 விழுக்காடு தடுப்பூசி

நேற்று ஒரேநாளில் மட்டும் ஐந்து லட்சத்து 72 ஆயிரத்து 898 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுதான் தடுப்பூசியின் ஒருநாள் அதிகபட்சமாகும். திமுக ஆட்சி அமைந்தவுடன் ஒருநாளில் செலுத்தப்படும் தடுப்பூசியின் சராசரி ஒரு லட்சத்து 97 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மூன்று லட்சத்து 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று (ஆகஸ்ட் 26) தமிழ்நாட்டில் ஐந்து லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்று மூன்றாவது அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தேவையான அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகள் நல மருத்துவர்களின் எண்ணிக்கை தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாநிலங்களவை இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் எம்.எம் அப்துல்லா வேட்பு மனு தாக்கல்

தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பள்ளிக்கூட பணியாளர்கள், ஆசிரியர்களின் குடும்பத்தாருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம், சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஆகஸ்ட் 27) தொடங்கியது.

இந்த முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டு தொடங்கிவைத்தனர்.

vaccine
ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி முகாம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்பிரமணியன், "சென்னையில் ஆசிரியர் அல்லாத பள்ளிக்கூட பணியாளர்களில் 89.32 விழுக்காடு நபர்களுக்கும், ஆசிரியர்களில் 90.11 விழுக்காடு நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் 100 விழுக்காடு ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலை ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் அரசு சார்பில் இதுவரை இரண்டு கோடியே 81 லட்சத்து 31 ஆயிரத்து 409 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கும் என மொத்தமாக மூன்று கோடியே ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 410 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்களுக்கு 100 விழுக்காடு தடுப்பூசி

நேற்று ஒரேநாளில் மட்டும் ஐந்து லட்சத்து 72 ஆயிரத்து 898 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுதான் தடுப்பூசியின் ஒருநாள் அதிகபட்சமாகும். திமுக ஆட்சி அமைந்தவுடன் ஒருநாளில் செலுத்தப்படும் தடுப்பூசியின் சராசரி ஒரு லட்சத்து 97 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மூன்று லட்சத்து 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று (ஆகஸ்ட் 26) தமிழ்நாட்டில் ஐந்து லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்று மூன்றாவது அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தேவையான அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகள் நல மருத்துவர்களின் எண்ணிக்கை தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாநிலங்களவை இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் எம்.எம் அப்துல்லா வேட்பு மனு தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.