ETV Bharat / state

தலைமை காவலரை காப்பாற்றிய ஊர்காவல் படை காவலருக்கு சன்மானம்! - chennai latest news

சென்னை: தலைமை காவலரை ரயில் விபத்திலிருந்து காப்பாற்றிய ஊர்காவல் படை காவலருக்கு அம்பத்தூர் துணை காவல் ஆணையர் சன்மானம் வழங்கி கவுரவித்தார்.

aavadi
author img

By

Published : Nov 22, 2019, 8:02 PM IST

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரத்தைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன்(46). திருமுல்லைவாயல் தலைமை காவலராக பணிபுரியும் இவர், கடந்த 18ஆம் தேதி அண்ணனூர் பகுதியில் நகை குற்றவாளியை பிடிக்க இருசக்கர வாகனத்தில் ஊர்க்காவல் படை காவலர் கிருபாகரன் என்பவருடன் சென்றார்.

வாகனத்தை ஓட்டிச்சென்ற சவுந்தரராஜன் அண்ணனூர் ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயிலை கண்டு செய்வதறியாது திணறிய நிலையில் அங்கேயே நின்றுவிட்டார். பின்னால் அமர்ந்திருந்த கிருபாகரன் துரிதமாகச் செயல்பட்டு, நொடிப் பொழுதில் அவரை இழுத்து காப்பாற்றினார்.

தலைமை காவலரை காப்பாற்றிய ஊர்காவல் படை காவலருக்கு சன்மானம்

இதில், சவுந்தரராஜன் சிறிது காயங்களுடன் உயிர்தப்பினார். ரயிலில் சிக்கிய இருசக்கர வாகனம் சுக்குநூறானது. காயம்பட்ட சவுந்தரராஜன் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், துரிதமாகச் செயல்பட்டு தலைமை காவலரின் உயிரைக் காப்பாற்றிய ஊர் காவல் படை காவலர் கிருபாகரனை அம்பத்தூர் துணை காவல் ஆணையர் அழைத்து பாராட்டியதோடு அவருக்கு ரொக்க பரிசும் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.

இதையும் படிங்க: பணியில் இருந்த காவலரை தாக்கிய இருவர் கைது!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரத்தைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன்(46). திருமுல்லைவாயல் தலைமை காவலராக பணிபுரியும் இவர், கடந்த 18ஆம் தேதி அண்ணனூர் பகுதியில் நகை குற்றவாளியை பிடிக்க இருசக்கர வாகனத்தில் ஊர்க்காவல் படை காவலர் கிருபாகரன் என்பவருடன் சென்றார்.

வாகனத்தை ஓட்டிச்சென்ற சவுந்தரராஜன் அண்ணனூர் ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயிலை கண்டு செய்வதறியாது திணறிய நிலையில் அங்கேயே நின்றுவிட்டார். பின்னால் அமர்ந்திருந்த கிருபாகரன் துரிதமாகச் செயல்பட்டு, நொடிப் பொழுதில் அவரை இழுத்து காப்பாற்றினார்.

தலைமை காவலரை காப்பாற்றிய ஊர்காவல் படை காவலருக்கு சன்மானம்

இதில், சவுந்தரராஜன் சிறிது காயங்களுடன் உயிர்தப்பினார். ரயிலில் சிக்கிய இருசக்கர வாகனம் சுக்குநூறானது. காயம்பட்ட சவுந்தரராஜன் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், துரிதமாகச் செயல்பட்டு தலைமை காவலரின் உயிரைக் காப்பாற்றிய ஊர் காவல் படை காவலர் கிருபாகரனை அம்பத்தூர் துணை காவல் ஆணையர் அழைத்து பாராட்டியதோடு அவருக்கு ரொக்க பரிசும் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.

இதையும் படிங்க: பணியில் இருந்த காவலரை தாக்கிய இருவர் கைது!

Intro:ஆவடி அருகே தலைமை காவலரை ரயில் விபத்தில் இருந்து காப்பாற்றிய ஊர்காவல் படை காவலருக்கு அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன் சன்மானம் வழங்கி கவுரவித்தார்Body:ஆவடி அருகே தலைமை காவலரை ரயில் விபத்தில் இருந்து காப்பாற்றிய ஊர்காவல் படை காவலருக்கு அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன் சன்மானம் வழங்கி கவுரவித்தார்

ஆவடி, வீராபுரத்தைச் சேர்ந்தவர், சவுந்தரராஜன், 46; திருமுல்லைவாயல் தலைமை காவலர். அண்ணனுார், சிவசக்தி நகரைச் சேர்ந்த சாய்ராம், 49, என்பவரது வீட்டில் திருடிய நபர் குறித்து,கடந்த 18 ஆம் தேதி
போலீசாருக்கு தகவல் கிடைத்தது.காவலர் சவுந்தரராஜன், குற்றவாளியை பிடிக்க, இருசக்கர வாகனத்தில் சென்றார். அவருடன், ஊர்க்காவல் படை காவலர் கிருபாகரன் சென்றார்.அண்ணனுார் ரயில் நிலையம் அருகே, ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது,அவ்வழியாக சென்னை நோக்கி, திருவனந்தபுரம் விரைவு ரயில் வேகமாக வந்தது. சவுந்தரராஜன் செய்வதறியாது திணறிய நிலையில், கிருபாகரன் துரிதமாக செயல்பட்டு, அவரை இழுத்து காப்பாற்றினார்.இதில், சவுந்தரராஜனுக்கு காயம் ஏற்பட்டது. ரயிலில் சிக்கிய இருசக்கர வாகனம் சுக்குநுாறானது. இதில் சவுந்தரராஜனுக்கு காலில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த நிலையில் துரிதமாக செயல்பட்டு தலைமை காவலரின் உயிரை காப்பாற்றிய ஊர் காவல் படை காவலரை அம்பத்தூர் துணை ஆணையர் அழைத்து பாரட்டியதோடு அவருக்கு ரொக்க பரிசு கொடுத்து ஊக்கப்படுத்தினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.