ETV Bharat / state

குட்கா ஊழல் வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி சிபிஐ கடிதம்

author img

By

Published : Jul 20, 2022, 10:38 AM IST

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமது கேட்டு தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது.

அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குபதிவு செய்ய அனுமதி கோரி சிபிஐ கடிதம்
அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குபதிவு செய்ய அனுமதி கோரி சிபிஐ கடிதம்

சென்னை: கடந்த 2016 ஆம் ஆண்டு செங்குன்றம் குடோனில் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்களுடன் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அதில் தடையை மீறி குட்கா விற்பனை செய்ய பல உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தெரியவந்தது.

இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே ராஜேந்திரன், ஜார்ஜ், எஸ்.பி விமலா, கலால்துறை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையாக வைத்து அவர்களை நேரில் அழைத்து விசாரணையும் நடத்தினர்.

அதன் பின்னர் குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவ ராவ், பங்குதாரர்கள் சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவக்குமார், மத்திய கலால் வரித்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய 6 பேரை சிபிஐ கைது செய்தது.

இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக சம்பாதித்த 639 கோடி ரூபாயில் பல மாநிலங்களில் அசையும்,அசையா சொத்துகள் வாங்கிருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சொந்தமான 246 கோடி சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கினர்.

இந்நிலையில் குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 12 அலுவலர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பி உள்ளது. குறிப்பாக உயர் பொறுப்பு வகித்தவர்கள் என்பதால் அரசு தரப்பில் அனுமதி பெற்ற பின்பு தான் வழக்குப்பதிவு செய்ய முடியும் என்ற நடைமுறையின் படி சிபிஐ தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 6 வருடத்திற்கு பிறகு மீண்டும் குட்கா வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முடிக்கக் கூடாது: உயர் நீதிமன்றத்தில் வலியுறுத்தல்

சென்னை: கடந்த 2016 ஆம் ஆண்டு செங்குன்றம் குடோனில் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்களுடன் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அதில் தடையை மீறி குட்கா விற்பனை செய்ய பல உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தெரியவந்தது.

இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே ராஜேந்திரன், ஜார்ஜ், எஸ்.பி விமலா, கலால்துறை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையாக வைத்து அவர்களை நேரில் அழைத்து விசாரணையும் நடத்தினர்.

அதன் பின்னர் குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவ ராவ், பங்குதாரர்கள் சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவக்குமார், மத்திய கலால் வரித்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய 6 பேரை சிபிஐ கைது செய்தது.

இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக சம்பாதித்த 639 கோடி ரூபாயில் பல மாநிலங்களில் அசையும்,அசையா சொத்துகள் வாங்கிருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சொந்தமான 246 கோடி சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கினர்.

இந்நிலையில் குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 12 அலுவலர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பி உள்ளது. குறிப்பாக உயர் பொறுப்பு வகித்தவர்கள் என்பதால் அரசு தரப்பில் அனுமதி பெற்ற பின்பு தான் வழக்குப்பதிவு செய்ய முடியும் என்ற நடைமுறையின் படி சிபிஐ தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 6 வருடத்திற்கு பிறகு மீண்டும் குட்கா வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முடிக்கக் கூடாது: உயர் நீதிமன்றத்தில் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.