ETV Bharat / state

சென்னை,செங்கல்பட்டு மாவட்ட ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற ரூ. 2000 கோடியில் பல்லுயிர் பூங்காக்கள்

author img

By

Published : May 10, 2022, 8:26 AM IST

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரி கரையோரங்களில் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல்லுயிர் பூங்காக்கள் அமைக்கவும், மரங்களை நடவும் விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தமிழக நீர் வள ஆதாரத்துறை தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை,செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நெமிலிச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு
சென்னை,செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நெமிலிச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு

சென்னை: அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி ஏரியை ஆக்கிரமித்து ஏராளமானோர் கட்டிடங்கள் கட்டி உள்ளதாகவும், ஏரிக்கு உட்பட்ட பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதாகவும் வந்த புகாரை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது. பின்னர், இங்குள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரத்துறைக்கு உத்தரவிட்டது.

அதன்படி, நீர் வள ஆதாரத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நெமிலிச்சேரி ஏரியை 528 பேர் ஆக்கிரமித்துள்ளதாகவும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது. ஆக்கிரமிப்பாளர்களின் விளக்கத்துக்கு பின்பு சட்டத்துக்கு உட்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கோவளம் வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட ஏரிகளின் ஆக்கிரமிப்பை அகற்றி அவற்றை பாதுகாக்கும் வகையில் ஏரியின் கரையோரங்களில் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்கவும், பல்வேறு வகையான மரங்களை நடவும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் நெமிலிச்சேரி ஏரியும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அரசு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்ததும் ஏற்கனவே இருந்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையில் தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் நெமிலிச்சேரி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது தொடர்பாக எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை என்றும், நோட்டீஸ் அனுப்பி ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளனர்.

மேலும், ஆக்கிரமிப்பை அகற்றும் விவகாரத்தில் கூட்டுக்குழு பரிந்துரை அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும் என்றும், ஆனால், தாக்கல் செய்யவில்லை என்பதால், அதை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிமங்க:'நீர்நிலைகளை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை...!'

சென்னை: அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி ஏரியை ஆக்கிரமித்து ஏராளமானோர் கட்டிடங்கள் கட்டி உள்ளதாகவும், ஏரிக்கு உட்பட்ட பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதாகவும் வந்த புகாரை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது. பின்னர், இங்குள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரத்துறைக்கு உத்தரவிட்டது.

அதன்படி, நீர் வள ஆதாரத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நெமிலிச்சேரி ஏரியை 528 பேர் ஆக்கிரமித்துள்ளதாகவும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது. ஆக்கிரமிப்பாளர்களின் விளக்கத்துக்கு பின்பு சட்டத்துக்கு உட்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கோவளம் வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட ஏரிகளின் ஆக்கிரமிப்பை அகற்றி அவற்றை பாதுகாக்கும் வகையில் ஏரியின் கரையோரங்களில் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்கவும், பல்வேறு வகையான மரங்களை நடவும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் நெமிலிச்சேரி ஏரியும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அரசு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்ததும் ஏற்கனவே இருந்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையில் தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் நெமிலிச்சேரி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது தொடர்பாக எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை என்றும், நோட்டீஸ் அனுப்பி ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளனர்.

மேலும், ஆக்கிரமிப்பை அகற்றும் விவகாரத்தில் கூட்டுக்குழு பரிந்துரை அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும் என்றும், ஆனால், தாக்கல் செய்யவில்லை என்பதால், அதை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிமங்க:'நீர்நிலைகளை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை...!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.