ETV Bharat / state

ஜெ. அன்பழகன் மறைவுக்கு பன்வாரிலால் புரோகித் இரங்கல்

author img

By

Published : Jun 10, 2020, 1:23 PM IST

சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

governor-banwarilal-purohit
governor-banwarilal-purohit

இதுகுறிக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், துக்கத்தையும் அளிக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2001 முதல் 2006 வரை தியாகராய நகர் சட்டமன்றத் தாெகுதியில் இருந்தும், அதனைத் தொடர்ந்து சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தாெகுதியிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டு, மக்கள் நலனுக்காக பல்வேறு பணிகளை செய்துவந்தார்.

அவரின் மறைவு தமிழ்நாடு மக்களுக்கும், திமுகவிற்கும் பெரும் இழப்பாகும். அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறிக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், துக்கத்தையும் அளிக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2001 முதல் 2006 வரை தியாகராய நகர் சட்டமன்றத் தாெகுதியில் இருந்தும், அதனைத் தொடர்ந்து சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தாெகுதியிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டு, மக்கள் நலனுக்காக பல்வேறு பணிகளை செய்துவந்தார்.

அவரின் மறைவு தமிழ்நாடு மக்களுக்கும், திமுகவிற்கும் பெரும் இழப்பாகும். அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'கரோனா தடுப்பில் பிரதமரின் சூத்திரத்தை மக்கள் பின்பற்ற வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.