ETV Bharat / state

"அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திடுக" - பறந்த உத்தரவு!

author img

By

Published : Apr 16, 2023, 3:27 PM IST

2023-24ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக் கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அறியும் வகையில் பேனர்கள்- துண்டு பிரசுரங்கள் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் மாவட்டக்கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

che
அரசு

சென்னை: பள்ளிக்கல்வித்துறை ஆணையர், தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் ஆகியோர் மாவட்டக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "இன்றைய மாணவர்களே நாட்டின் எதிர்கால தூண்கள் மாணவர்களின் வகுப்பறை சூழல் சுமையானதாக இல்லாமல், இனிமை உடையதாகவும், ஒவ்வொரு நாளும் என்ன புதுமை வகுப்பறையில் நிகழ உள்ளதோ? என்ற எதிர்பார்ப்பில் பள்ளியை நோக்கி மாணவர்கள் வருவதற்கும், எத்தகைய அசாதாரண சூழலையும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்கும் இடமாக பள்ளிகள் இருக்க வேண்டும். பள்ளிப் பருவத்தில் அதற்குண்டான பயிற்சிகள், படிப்புடன் கூடிய செயல்பாடாக ஒவ்வொரு பள்ளியிலும் அமைவது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

இந்தகைய மகிழ்ச்சியான வகுப்பறை சூழலை அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பெறுவதற்காக தமிழ்நாடு அரசு, சத்துள்ள காலை உணவு, மதிய உணவு, விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பை, கிரையான்ஸ், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டி, புவியியல் வரைபட புத்தகம், காலணிகள், கம்பளி சட்டை, மழைக்கால ஆடை மற்றும் பேருந்து பயண அட்டை போன்ற நலத்திட்டங்களை வழங்கி வருகின்றது.

மேலும், எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டு 1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவுத் திறன்களைப் பெறுவதை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் கற்றல் நிலைக்கேற்ப மாணவர்களை மையப்படுத்திய கற்றல் கற்பித்தல் அணுகுமுறையோடு, எண்ணும் எழுத்தும் இயக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. கற்றல் இணை செயல்பாடுகளை ஊக்குவிக்க கலைத் திருவிழா, கலையரங்கம் மற்றும் பல்வேறு மன்ற செயல்பாடுகள் மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றன.

இது போன்ற நடவடிக்கைகளை எடுத்தாலும், தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே, 2023-24ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2023-24ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட வேண்டும். இதற்காக வாகனத்தை ஏற்பாடு செய்து, அரசின் நலத்திட்டங்கள், கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள், இணைச் செயல்பாடுகள் விபரங்களை தெரிவிக்க வேண்டும். மேலும், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களும் பங்கு பெற வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தமிழ் வழிப்பிரிவுகளுடன் துவக்கப்பட்டுள்ள ஆங்கில வழி பிரிவுகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி, மாணவர்கள் எண்ணிக்கையை இந்தக் கல்வியாண்டில் உயர்த்த அறிவுறுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக் கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தொடர் விடுமுறை எதிரொலி; ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

சென்னை: பள்ளிக்கல்வித்துறை ஆணையர், தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் ஆகியோர் மாவட்டக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "இன்றைய மாணவர்களே நாட்டின் எதிர்கால தூண்கள் மாணவர்களின் வகுப்பறை சூழல் சுமையானதாக இல்லாமல், இனிமை உடையதாகவும், ஒவ்வொரு நாளும் என்ன புதுமை வகுப்பறையில் நிகழ உள்ளதோ? என்ற எதிர்பார்ப்பில் பள்ளியை நோக்கி மாணவர்கள் வருவதற்கும், எத்தகைய அசாதாரண சூழலையும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்கும் இடமாக பள்ளிகள் இருக்க வேண்டும். பள்ளிப் பருவத்தில் அதற்குண்டான பயிற்சிகள், படிப்புடன் கூடிய செயல்பாடாக ஒவ்வொரு பள்ளியிலும் அமைவது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

இந்தகைய மகிழ்ச்சியான வகுப்பறை சூழலை அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பெறுவதற்காக தமிழ்நாடு அரசு, சத்துள்ள காலை உணவு, மதிய உணவு, விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பை, கிரையான்ஸ், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டி, புவியியல் வரைபட புத்தகம், காலணிகள், கம்பளி சட்டை, மழைக்கால ஆடை மற்றும் பேருந்து பயண அட்டை போன்ற நலத்திட்டங்களை வழங்கி வருகின்றது.

மேலும், எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டு 1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவுத் திறன்களைப் பெறுவதை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் கற்றல் நிலைக்கேற்ப மாணவர்களை மையப்படுத்திய கற்றல் கற்பித்தல் அணுகுமுறையோடு, எண்ணும் எழுத்தும் இயக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. கற்றல் இணை செயல்பாடுகளை ஊக்குவிக்க கலைத் திருவிழா, கலையரங்கம் மற்றும் பல்வேறு மன்ற செயல்பாடுகள் மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றன.

இது போன்ற நடவடிக்கைகளை எடுத்தாலும், தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே, 2023-24ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2023-24ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட வேண்டும். இதற்காக வாகனத்தை ஏற்பாடு செய்து, அரசின் நலத்திட்டங்கள், கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள், இணைச் செயல்பாடுகள் விபரங்களை தெரிவிக்க வேண்டும். மேலும், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களும் பங்கு பெற வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தமிழ் வழிப்பிரிவுகளுடன் துவக்கப்பட்டுள்ள ஆங்கில வழி பிரிவுகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி, மாணவர்கள் எண்ணிக்கையை இந்தக் கல்வியாண்டில் உயர்த்த அறிவுறுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக் கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தொடர் விடுமுறை எதிரொலி; ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.