வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருள்கள் கொண்டு வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த கடலூரைச் சேர்ந்த அப்துல் ரசாக் (40), ராமநாதபுரத்தைச் சேர்ந்த இன்ஹானுல்லா (33), சிந்தா (49) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களை தனி அறைக்கு அழைத்து சோதனை செய்தபோது கடத்திவந்த 46 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 1.9 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (27) என்போரை நிறுத்தி சோதனை செய்தபோது கடத்தி கொண்டுவரப்பட்ட 20 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 486 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
நான்கு பேரிடமிருந்து 66 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 1.58 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவம் குறித்து சுங்கத்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்