ETV Bharat / state

விமானத்தில் 315 கிராம் தங்கம் கடத்தல்: ஒருவர் கைது!

author img

By

Published : Oct 23, 2020, 7:00 PM IST

சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த மீட்பு விமானத்தில் 16.7 லட்சம் ரூபாய் மதிப்புடைய 315 கிராம் தங்கத்தை கடத்திவந்த பயணியை சுங்கத் துறை அலுவலர்கள் கைதுசெய்தனர்.

விமானத்தில் 315 கிராம் தங்கம் கடத்தல்: ஒருவர் கைது!
Chennai airport

துபாயிலிருந்து மீட்பு விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (அக். 23) வந்தடைந்தது. அதில் 169 இந்தியர்கள் வந்தனர்.

அவர்கள் அனைவரையும் சுங்கத் துறையினர் பரிசோதித்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த மஸ்தான்கனி (49) என்ற பயணியின் மீது அலுவலர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரை அழைத்த அலுவலர்கள் அவரது உடமைகளைச் சோதனையிட்டனர். பின்பு தனி அறைக்கு அழைத்துச் சென்று அவரைப் பரிசோதித்தனர்.

அப்போது அவருடைய உள்ளாடைக்குள் தங்கக்கட்டிகளை மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 16.7 லட்சம் ரூபாய் மதிப்பிலான 315 கிராம் தங்கத்தைப் பறிமுதல்செய்தனர்.

இதையடுத்து, அவரைக் கைதுசெய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

துபாயிலிருந்து மீட்பு விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (அக். 23) வந்தடைந்தது. அதில் 169 இந்தியர்கள் வந்தனர்.

அவர்கள் அனைவரையும் சுங்கத் துறையினர் பரிசோதித்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த மஸ்தான்கனி (49) என்ற பயணியின் மீது அலுவலர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரை அழைத்த அலுவலர்கள் அவரது உடமைகளைச் சோதனையிட்டனர். பின்பு தனி அறைக்கு அழைத்துச் சென்று அவரைப் பரிசோதித்தனர்.

அப்போது அவருடைய உள்ளாடைக்குள் தங்கக்கட்டிகளை மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 16.7 லட்சம் ரூபாய் மதிப்பிலான 315 கிராம் தங்கத்தைப் பறிமுதல்செய்தனர்.

இதையடுத்து, அவரைக் கைதுசெய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.