ETV Bharat / state

வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்!

author img

By

Published : Sep 24, 2019, 11:23 AM IST

சென்னை: தாய்லாந்து, அபுதாபி ஆகிய நாடுகளிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ. 2 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தங்கம்

சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருட்கள் கொண்டுவரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத் துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது தாய்லாந்திலிருந்து வந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த அஸ்ரப் அலி (52), அவரது மனைவி சாயிரா பானு (50), மகன் முகமது சாலி (23) ஆகியோர் வந்தனர்.

Gold Seized from Motor
Gold Seized from Motor

சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் அலுவலர்கள் நடத்திய விசாரணையில், உள்ளாடைக்குள் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து கடத்திவந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடமிருந்து ரூ. 97 லட்சம் மதிப்புள்ள 2.5 கிலோ தங்கத்தை கைப்பற்றினார்கள். அதே விமானத்தில் தாய்லாந்திலிருந்து வந்த கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சலீம் (40) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, காலில் அணியும் சாக்சில் மறைத்து வைத்திருந்த ரூ. 39 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கக் கட்டிகளை அலுவலர்கள் கைப்பற்றினார்கள். அதேபோல், அபுதாபியிலிருந்து வந்த விமானத்தில் வந்த கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சையத் லாபி குன்னதோடி (50) என்பவரது உடமைகளை சோதனை செய்தபோது மோட்டார் ஒன்று இருந்தது.

அதை கழற்றி பார்த்தபோது அதில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். அதில் ரூ. 64 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 640 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினார்கள்.

Gold Seized

மேலும், சலீம் கொண்டுவந்த ஒரு கிலோ தங்கத்தை வாங்கவந்த சென்னையைச் சேர்ந்த இளைஞரையும் அலுவலர்கள் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அஸ்ரப் அலி, அவரது மனைவி சாயிரா பானு, கேரளாவைச் சேர்ந்த சையத் லாபி குன்னதோடி மற்றும் சலீம், இவரிடம் நகையை வாங்க வந்த இளைஞர் ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ள அலுவலர்கள், இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கடத்தி வரப்பட்ட 290 கிராம் தங்கம் - சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருட்கள் கொண்டுவரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத் துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது தாய்லாந்திலிருந்து வந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த அஸ்ரப் அலி (52), அவரது மனைவி சாயிரா பானு (50), மகன் முகமது சாலி (23) ஆகியோர் வந்தனர்.

Gold Seized from Motor
Gold Seized from Motor

சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் அலுவலர்கள் நடத்திய விசாரணையில், உள்ளாடைக்குள் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து கடத்திவந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடமிருந்து ரூ. 97 லட்சம் மதிப்புள்ள 2.5 கிலோ தங்கத்தை கைப்பற்றினார்கள். அதே விமானத்தில் தாய்லாந்திலிருந்து வந்த கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சலீம் (40) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, காலில் அணியும் சாக்சில் மறைத்து வைத்திருந்த ரூ. 39 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கக் கட்டிகளை அலுவலர்கள் கைப்பற்றினார்கள். அதேபோல், அபுதாபியிலிருந்து வந்த விமானத்தில் வந்த கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சையத் லாபி குன்னதோடி (50) என்பவரது உடமைகளை சோதனை செய்தபோது மோட்டார் ஒன்று இருந்தது.

அதை கழற்றி பார்த்தபோது அதில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். அதில் ரூ. 64 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 640 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினார்கள்.

Gold Seized

மேலும், சலீம் கொண்டுவந்த ஒரு கிலோ தங்கத்தை வாங்கவந்த சென்னையைச் சேர்ந்த இளைஞரையும் அலுவலர்கள் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அஸ்ரப் அலி, அவரது மனைவி சாயிரா பானு, கேரளாவைச் சேர்ந்த சையத் லாபி குன்னதோடி மற்றும் சலீம், இவரிடம் நகையை வாங்க வந்த இளைஞர் ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ள அலுவலர்கள், இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கடத்தி வரப்பட்ட 290 கிராம் தங்கம் - சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!

Intro:தாய்லாந்து, அபுதாபியில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 2 கோடி லட்சம் மதிப்புள்ள 5 கிலோ தங்கம் பறிமுதல் கணவன்-மனைவி உள்பட 5 பேர் Body:தாய்லாந்து, அபுதாபியில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 2 கோடி லட்சம் மதிப்புள்ள 5 கிலோ தங்கம் பறிமுதல் கணவன்-மனைவி உள்பட 5 பேர் கைது

சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது தாய்லாந்தில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த அஸ்ரப் அலி(52), அவரது மனைவி சாயிரா பானு(50), மகன் முகமது சாலி(23) ஆகியோர் வந்தார். இவர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்குபின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இவர்களிடம் இருந்து ரூ. 97 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 500 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

அதே விமானத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சலீம்(40) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காலில் அணியும் சாக்சில் மறைத்து வைத்திருந்த ரூ. 39 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்க கட்டிகளை கைப்பற்றினார்கள். மேலும் விசாரணையில் தாய்லாந்து விமான நிலையத்தில் ஒருவர் தந்ததாகவும் சென்னை விமான நிலையத்தில் ஒருவர் பெற்று கொள்வார் என்று கூறியதாக தெரிவித்தார். இதையடுத்து சலீமை வெளியே அழைத்து வந்து காத்திருந்த போது ஒரு கிலோ தங்கத்தை வாங்க வந்த சென்னையை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர்.
மேலும் சென்னைக்கு அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் வந்த கேரளா மாநில மலப்புரத்தை சேர்ந்த சையத் லாபி குன்னதோடி(50) என்பவர் வந்தார். இவரது உடமைகளை சோதனை செய்தபோது மோட்டார் ஒன்று இருந்தது. அதை கழுற்றி பார்த்தபோது அதில் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ரூ. 64 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 640 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

தாய்லாந்து, அபுதாபி ஆகிய நாடுகளில் இருந்து ரூ. 2 கோடி மதிப்புள்ள 5 கிலோ 140 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அஸ்ரப் அலி, அவரது மனைவி சாயிரா பானு, கேரளாவை சேர்ந்த சையத் லாபி குன்னதோடி மற்றும் சலீம், இவரிடம் நகையை வாங்க வந்த வாலிபர் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.