ETV Bharat / state

நடிகர் விஷாலுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 1:43 PM IST

Actor vishal: நடிகர் விஷால் லைகா நிறுவனத்திடம் இருந்து பெற்ற கடனை போதிய அவகாசம் வழங்கியும் திருப்பி செலுத்தாததால் திரைப்படத்தில் நடிப்பதற்கு அவருக்கு தடை விதிப்பதில் என்ன தவறு உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

நடிகர் விஷாலுக்கு திரைப்படத்தில் நடிக்க தடை விதிப்பதில் என்ன தவறு உள்ளது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
நடிகர் விஷாலுக்கு திரைப்படத்தில் நடிக்க தடை விதிப்பதில் என்ன தவறு உள்ளது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை: நீதிமன்றம் நடிகர் விஷாலுக்கு போதிய கால அவகாசம் வழங்கியும் பணத்தை கொடுக்க தயாராக இல்லை என்றால், திரைப்படத்தில் நடிப்பதற்கு தடை விதிப்பதில் என்ன தவறு உள்ளது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நடிகர் விஷால், தனது 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு திருப்பி செலுத்தியது.

அந்த தொகை முழுவதையும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை இரு தரப்பும் போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை மீறியதாக விஷால் பட நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் விஷால் 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும், அசையும், அசையா சொத்து விவரங்களை விஷால் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், விஷால் நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.

இதையும் படிங்க: "தீபாவளிக்கு எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம்" - அமைச்சர் கொடுத்த அப்டேட்!

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 2021ல் நீதிமன்ற அளித்த உத்தரவின்படி 15 கோடி ரூபாயை இதுவரை செலுத்தவில்லை, மேலும் திரைப்படத்தின் மூலம் கிடைத்த 28 கோடி ரூபாய் வருவாயை தங்களுக்கு வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தில் அவர் ஒரு நடிகராக நடித்து உள்ளதாகவும், சக்ரா முதல் அனைத்து படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை குவிக்காததால், பணத்தை கொடுக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, நீதிமன்றம் போதிய கால அவகாசம் வழங்கியும் பணத்தை கொடுக்க தயாராக இல்லை என்றால், திரைப்படத்தில் நடிப்பதற்கு விஷாலுக்கு தடை விதிப்பதில் என்ன தவறு உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

இதை தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதி ஆஷா விசாரிப்பார் என தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: நயன்தாராவின் "அன்னபூரணி" ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்ப தெரியுமா?

சென்னை: நீதிமன்றம் நடிகர் விஷாலுக்கு போதிய கால அவகாசம் வழங்கியும் பணத்தை கொடுக்க தயாராக இல்லை என்றால், திரைப்படத்தில் நடிப்பதற்கு தடை விதிப்பதில் என்ன தவறு உள்ளது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நடிகர் விஷால், தனது 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு திருப்பி செலுத்தியது.

அந்த தொகை முழுவதையும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை இரு தரப்பும் போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை மீறியதாக விஷால் பட நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் விஷால் 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும், அசையும், அசையா சொத்து விவரங்களை விஷால் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், விஷால் நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.

இதையும் படிங்க: "தீபாவளிக்கு எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம்" - அமைச்சர் கொடுத்த அப்டேட்!

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 2021ல் நீதிமன்ற அளித்த உத்தரவின்படி 15 கோடி ரூபாயை இதுவரை செலுத்தவில்லை, மேலும் திரைப்படத்தின் மூலம் கிடைத்த 28 கோடி ரூபாய் வருவாயை தங்களுக்கு வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தில் அவர் ஒரு நடிகராக நடித்து உள்ளதாகவும், சக்ரா முதல் அனைத்து படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை குவிக்காததால், பணத்தை கொடுக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, நீதிமன்றம் போதிய கால அவகாசம் வழங்கியும் பணத்தை கொடுக்க தயாராக இல்லை என்றால், திரைப்படத்தில் நடிப்பதற்கு விஷாலுக்கு தடை விதிப்பதில் என்ன தவறு உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

இதை தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதி ஆஷா விசாரிப்பார் என தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: நயன்தாராவின் "அன்னபூரணி" ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்ப தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.