ETV Bharat / state

அம்பத்தூரில் இளைஞரை வாகனத்தில் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல் - போலீசார் விசாரணை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 11:13 AM IST

Ambattur murder attempt issue: அம்பத்தூரில் பகல் பொழுதில் இளைஞரை இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்ற கும்பல், அவரை சரமாரியாக வெட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் வலைவீச்சு
அம்பத்தூரில் இளைஞரை வாகனத்தில் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல்

சென்னை: அம்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவரை, இரண்டு இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்ற கும்பல், அவரை சாலையில் வைத்தே சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர், யஸ்வந்த். இவர் புழல் பகுதியில் இருந்து அம்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருக்கும்போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் இவரை பின் தொடர்ந்து சில நபர்கள் வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அம்பத்தூர் அருகே புதூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, யஸ்வந்தின் இருசக்கர வாகனத்தை மடக்கிய மர்ம நபர்கள், அவரை கீழே தள்ளி சரமாரியாக தலை, கை, கால்களில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீசார், பலத்த காயமடைந்த யஸ்வந்தை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: விமான நிலைய பெண் ஊழியர்கள் வீடுகளில் சோதனை.. ரூ.5 கோடி விலையிலான தங்கம் பறிமுதல் - 4 பேர் அதிரடி கைது!

மேலும்ம், இச்சம்பவம் குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து யஸ்வந்தை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் யார், எதற்காக கொலை செய்ய முயற்சித்தார்கள், ஏதேனும் முன்விரோதம் இருக்கிறதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி மேகராவில் பதிவான காட்சிகளையும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கோபி அருகே கால்நடை திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது சாதிய வன்கொடுமை? - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அளித்த பதில்!

சென்னை: அம்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவரை, இரண்டு இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்ற கும்பல், அவரை சாலையில் வைத்தே சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர், யஸ்வந்த். இவர் புழல் பகுதியில் இருந்து அம்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருக்கும்போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் இவரை பின் தொடர்ந்து சில நபர்கள் வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அம்பத்தூர் அருகே புதூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, யஸ்வந்தின் இருசக்கர வாகனத்தை மடக்கிய மர்ம நபர்கள், அவரை கீழே தள்ளி சரமாரியாக தலை, கை, கால்களில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீசார், பலத்த காயமடைந்த யஸ்வந்தை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: விமான நிலைய பெண் ஊழியர்கள் வீடுகளில் சோதனை.. ரூ.5 கோடி விலையிலான தங்கம் பறிமுதல் - 4 பேர் அதிரடி கைது!

மேலும்ம், இச்சம்பவம் குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து யஸ்வந்தை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் யார், எதற்காக கொலை செய்ய முயற்சித்தார்கள், ஏதேனும் முன்விரோதம் இருக்கிறதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி மேகராவில் பதிவான காட்சிகளையும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கோபி அருகே கால்நடை திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது சாதிய வன்கொடுமை? - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அளித்த பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.