ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பிணை கோரி மனு

author img

By

Published : Jun 22, 2021, 10:55 AM IST

Updated : Jun 22, 2021, 1:02 PM IST

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பிணை கோரி மனு
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பிணை கோரி மனு

10:51 June 22

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் திரைப்பட நடிகை அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பிணைகோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை அளித்தப் புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், முன்பிணை கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 16 அன்று தள்ளுபடி செய்தது.

கைதான மணிகண்டன்
இதையடுத்து, மணிகண்டனை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல் துறையினர் கடந்த 20ஆம் தேதி கைது செய்தனர்.
இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மணிகண்டனை வரும் 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்கக்கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

இதையும் படிங்க: பேரவையின் மாற்றுத்தலைவர்களை அறிமுகம் செய்து வைத்த சபாநாயகர்

10:51 June 22

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் திரைப்பட நடிகை அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பிணைகோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை அளித்தப் புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், முன்பிணை கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 16 அன்று தள்ளுபடி செய்தது.

கைதான மணிகண்டன்
இதையடுத்து, மணிகண்டனை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல் துறையினர் கடந்த 20ஆம் தேதி கைது செய்தனர்.
இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மணிகண்டனை வரும் 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்கக்கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

இதையும் படிங்க: பேரவையின் மாற்றுத்தலைவர்களை அறிமுகம் செய்து வைத்த சபாநாயகர்

Last Updated : Jun 22, 2021, 1:02 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.