ETV Bharat / state

2021இல் எல்லாம் மாறும் - ஸ்டாலின் நம்பிக்கை

author img

By

Published : Jan 5, 2020, 3:22 PM IST

சென்னை: 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையடுத்து தமிழ்நாட்டில் அனைத்தும் மாறும் என திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

former DMK leader Karunanidhi's statue opened by dmk leader m.k.stalin
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மார்புளவு சிலை திறப்பு

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திமுக தென்சென்னை கட்சி அலுவலகத்தில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மார்பளவு சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், சிலை அமைப்பது கருணாநிதிக்குப் பெருமைத் தேடிதருவதற்கு அல்ல; அவரது உழைப்பையும், அவர் ஆற்றியுள்ள பணிகளையும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக எனக் கூறினார்.

இரண்டு நாள்களாக உள்ளாட்சித் தேர்தல் மூலம் நல்ல செய்திகளைக் கேட்டுவருகின்றோம் என மகிழ்ச்சி தெரிவித்த அவர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 2100 இடங்களிலும், அதிமுக 1781 இடங்களில் வெற்றிபெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, திமுக 319 இடங்களைக் கூடுதலாக கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது என்றார். அதேபோல மாவட்ட கவுன்சிலர் பதவிகளிலும் திமுக 23 இடங்களை கூடுதலாக கைப்பற்றியுள்ளதையும் குறிப்பிட்டார்.

ஆனால் சில ஊடகங்கள் சிலருக்கு பயந்து தேர்தல் முடிவுகளில் திமுக, அதிமுக சரிசமமாக வெற்றிபெற்றுள்ளது என்று வெளியிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

2021இல் எல்லாம் மாறும்- ஸ்டாலின் நம்பிக்கை

மேலும், அந்த முடிவுகளில் எது வளர்பிறை, எது தேய்பிறை எனக் கேள்வி எழுப்பிய அவர், நடைபெறவுள்ள 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இவை எல்லாம் மாறும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ. ம. சுப்பிரமணியன், பொன்முடி, எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கலந்துகொண்டனர். இதில், எம்.எல்.ஏ. ம. சுப்பிரமணியன் ஸ்டாலினுக்கு கேடயம், வாளினை வழங்கினார்.

இதையும் படிங்க:‘இன்று உள்ளாட்சி... விரைவில் நல்லாட்சி!’ - ஸ்டாலின்

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திமுக தென்சென்னை கட்சி அலுவலகத்தில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மார்பளவு சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், சிலை அமைப்பது கருணாநிதிக்குப் பெருமைத் தேடிதருவதற்கு அல்ல; அவரது உழைப்பையும், அவர் ஆற்றியுள்ள பணிகளையும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக எனக் கூறினார்.

இரண்டு நாள்களாக உள்ளாட்சித் தேர்தல் மூலம் நல்ல செய்திகளைக் கேட்டுவருகின்றோம் என மகிழ்ச்சி தெரிவித்த அவர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 2100 இடங்களிலும், அதிமுக 1781 இடங்களில் வெற்றிபெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, திமுக 319 இடங்களைக் கூடுதலாக கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது என்றார். அதேபோல மாவட்ட கவுன்சிலர் பதவிகளிலும் திமுக 23 இடங்களை கூடுதலாக கைப்பற்றியுள்ளதையும் குறிப்பிட்டார்.

ஆனால் சில ஊடகங்கள் சிலருக்கு பயந்து தேர்தல் முடிவுகளில் திமுக, அதிமுக சரிசமமாக வெற்றிபெற்றுள்ளது என்று வெளியிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

2021இல் எல்லாம் மாறும்- ஸ்டாலின் நம்பிக்கை

மேலும், அந்த முடிவுகளில் எது வளர்பிறை, எது தேய்பிறை எனக் கேள்வி எழுப்பிய அவர், நடைபெறவுள்ள 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இவை எல்லாம் மாறும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ. ம. சுப்பிரமணியன், பொன்முடி, எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கலந்துகொண்டனர். இதில், எம்.எல்.ஏ. ம. சுப்பிரமணியன் ஸ்டாலினுக்கு கேடயம், வாளினை வழங்கினார்.

இதையும் படிங்க:‘இன்று உள்ளாட்சி... விரைவில் நல்லாட்சி!’ - ஸ்டாலின்

Intro:Body:சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திமுக தென் சென்னை கட்சி அலுவலகத்தில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மார்பு அளவு சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கலைஞர் கணினி கல்வியகம் அறக்கட்டளையையும் தொடங்கி வைத்தார். இதில் எம்.எல்.ஏ ம.சுப்பிரமணியன், எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ பொன்முடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

எம்.எல்.ஏ ம.சுப்பிரமணியன் கேடயம், வாள் வழங்க திமுக தலைவர் ஸ்டாலின் பெற்று கொண்டு உயர்த்தி காட்டினார்.

அதனை தொடர்ந்து மேடையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தர வேண்டும் என்று கலைஞர் கணினி கல்வியகம் என்ற பெயரில் அறக்கட்டளையை தொடங்கியுள்ளோம்.

அதே போல் தலைவர் கலைஞர் சிலையை திறந்து வைத்துள்ளோம். அண்ணா அறிவாலயம், முரசொலி அலுவலகம், தமிழர் பேரவை போன்ற இடங்களில் கலைஞர் சிலை அமைக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை சைதாப்பேட்டையில் நான்காவதாக கலைஞர் சிலை அமைத்துள்ளோம்.

சிலை அமைப்பது அவருக்கு பெருமை தேடி தருவதற்கு அல்ல, அவரது உழைப்பையும், அவர் ஆற்றியுள்ள பணிகளையும் மக்களிடம் எடுத்து செல்வதற்காக என தெரிவித்தார்.

இரண்டு நாட்களாக உள்ளாட்சி தேர்தல் மூலம் நமக்கு அருமையான நல்ல செய்திகளை கேட்டு வருகின்றோம்.

ஊடகங்கள் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக, அதிமுக சரிசமமாக வெற்றி பெற்றுள்ளது என்று யாருக்கு பயந்து செய்தி வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை.

வளர்பிறை, தேய்பிறை என்று அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்த நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக, ஒன்றிய கவுன்சிலரில் திமுக 2100 இடங்களிலும், அதிமுக அதில் 1781 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் திமுக 319 இடங்கள் கூடுதலாக வெற்றி பெற்றுள்ள நிலையில் இதை சரிசமம் என்று கூறிவருகின்றனர் என விமர்சித்தார். அதே போல் மாவட்ட கவுன்சிலர் இடங்களிலும் அதிமுகவை விட திமுக 23 இடங்களில் கூடுதலாக பெற்றுள்ளது. இதில் எது வளர்பிறை, தேய்பிறை முந்திரிக்கொட்டை அமைச்சரே என்று விமர்சித்து கேளவி எழுப்பினார்.

ஊடகங்கள் உண்மையாக எழுதும் காலம் 2021இல் வரும் என பேசினார். Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.