ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் கட்டாயத்தின் பேரில் கருக்கலைப்பு ?

author img

By

Published : Jul 1, 2021, 9:01 AM IST

Updated : Jul 1, 2021, 10:00 AM IST

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் கட்டாயத்தின் பேரில் நடிகைக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக காவல்துறை விசாரணையில் மருத்துவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

manikandan
manikandan

சென்னை: துணை நடிகை அளித்த பாலியல் புகாரில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் வன்கொடுமை உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்து கோபாலபுரத்தைச் சேர்ந்த மருத்துவரிடம் அடையாறு மகளிர் காவல்துறை நடத்திய விசாரணையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் கட்டாயத்தின் பேரில் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக அவர் தெரிவித்தாக கூறப்படுகிறது.

பிரபல ஓட்டலில் விசாரணை நடத்த திட்டம்

மேலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகையை தென் மாவட்டத்தில் உள்ள பிரபல ஓட்டலுக்கு அழைத்துச் சென்று தங்கியிருந்தது தொடர்பான ஆதாரங்கள் சிக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஓட்டலுக்குச் சென்று விசாரணை நடத்த காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

செல்போனை கைப்பற்ற முயற்சி

மேலும், கைதான மணிகண்டனின் ஸ்மார்ட்போனை அடையாறு மகளிர் காவல் துறையினர் பறிமுதல் செய்யவில்லை. சாதாரண இரண்டு போன்களை மட்டுமே கைப்பற்றியுள்ளனர்.

இதையும் படிங்க: சிறைக்குள் சொகுசு வாழ்க்கை: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்!

சென்னை: துணை நடிகை அளித்த பாலியல் புகாரில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் வன்கொடுமை உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்து கோபாலபுரத்தைச் சேர்ந்த மருத்துவரிடம் அடையாறு மகளிர் காவல்துறை நடத்திய விசாரணையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் கட்டாயத்தின் பேரில் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக அவர் தெரிவித்தாக கூறப்படுகிறது.

பிரபல ஓட்டலில் விசாரணை நடத்த திட்டம்

மேலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகையை தென் மாவட்டத்தில் உள்ள பிரபல ஓட்டலுக்கு அழைத்துச் சென்று தங்கியிருந்தது தொடர்பான ஆதாரங்கள் சிக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஓட்டலுக்குச் சென்று விசாரணை நடத்த காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

செல்போனை கைப்பற்ற முயற்சி

மேலும், கைதான மணிகண்டனின் ஸ்மார்ட்போனை அடையாறு மகளிர் காவல் துறையினர் பறிமுதல் செய்யவில்லை. சாதாரண இரண்டு போன்களை மட்டுமே கைப்பற்றியுள்ளனர்.

இதையும் படிங்க: சிறைக்குள் சொகுசு வாழ்க்கை: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்!

Last Updated : Jul 1, 2021, 10:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.