ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்!

author img

By

Published : Jun 20, 2021, 6:38 PM IST

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, இரண்டு மணி நேர விசாரணைக்குப் பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது கடந்த மே 28ஆம் தேதி துணை நடிகர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் அடையாறு காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மணிகண்டன் முன்பிணைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிடிபட்ட மணிகண்டன்

இதையடுத்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல் துறையினர் இன்று (ஜுன் 20) அதிகாலை பெங்களூருவில் கைது செய்தனர்.

இரண்டு மணிநேர விசாரணை

இதையடுத்து, அவரை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த காவல் துறையினர், அடையாறு துணை ஆணையர் தலைமையில் சுமார் இரண்டு மணிநேரமாக விசாரணை நடத்தினர்.

நீதிமன்றத்தில் ஆஜர்

மேலும், மணிகண்டனின் உதவியாளரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடரந்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அரசுக்கு துரோகம் செய்தார் : சாந்தினி - மருத்துவர் தொலைபேசி உரையாடல்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது கடந்த மே 28ஆம் தேதி துணை நடிகர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் அடையாறு காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மணிகண்டன் முன்பிணைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிடிபட்ட மணிகண்டன்

இதையடுத்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல் துறையினர் இன்று (ஜுன் 20) அதிகாலை பெங்களூருவில் கைது செய்தனர்.

இரண்டு மணிநேர விசாரணை

இதையடுத்து, அவரை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த காவல் துறையினர், அடையாறு துணை ஆணையர் தலைமையில் சுமார் இரண்டு மணிநேரமாக விசாரணை நடத்தினர்.

நீதிமன்றத்தில் ஆஜர்

மேலும், மணிகண்டனின் உதவியாளரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடரந்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அரசுக்கு துரோகம் செய்தார் : சாந்தினி - மருத்துவர் தொலைபேசி உரையாடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.