ETV Bharat / state

தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வருவதை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை

author img

By

Published : Apr 8, 2023, 10:00 AM IST

சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம், சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவை துவக்க நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதையொட்டி சென்னை விமான நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

Prime Minister Narendra Modi
தமிழ்நாட்டிற்கு மோடி வருகை
தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வருவதை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் பயணமாக இன்று தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள பேகம்பட் விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் மாலை 2:45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அதைத் தொடர்ந்து சென்னை பழைய விமான நிலையத்தில் பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதன் பின்பு பிரதமர் சென்னை புதிய விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம், பல்லாவரம் ஆல்ஸ்ட்ராம் கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் நடக்கும் 4 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு, பின்னர் இன்று இரவு 7:45 மணிக்கு தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் மைசூர் சென்று, இரவு தங்குகிறார். மறுநாள் காலை மைசூரில் இருந்து ஹெலிகாப்டரில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு செல்கிறார். அதன் பின்பு மீண்டும் ஹெலிகாப்டரில் மைசூர் செல்கிறார்.

இதைப்போல் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் தமிழ்நாடு வருவதையொட்டி, டெல்லியில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட எஸ்பிஜி வீரர்கள் சென்னை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர் சென்னை மற்றும் புறநகரில் 5 மணி நேரம் காரில், ஹெலிகாப்டரில் பறந்தபடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு இரவு 7:45 மணிக்கு தனி விமானத்தில், கர்நாடக மாநிலம் மைசூர் சென்று விடுகிறார்.

இதற்காக சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா கடற்கரை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20,000ற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பிரதமர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனைத்து இடங்களும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் சென்னை வருகையை ஒட்டி நேற்று எஸ்பிஜி போலீசார் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர். அதாவது சென்னை பழைய விமான நிலையம் கேட் எண் 6 வழியாக புறப்படும் கான்வாய் கார்களின் அணிவகுப்பு திறப்பு விழா நடக்க இருக்கும். சென்னை புதிய ஒருங்கிணைந்த விமான நிலையம் சென்று விட்டு அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக ஐஎன்எஸ் அடையாறு, சென்ட்ரல் ரயில் நிலையம் செல்கிறது.

அதன் பின்பு அங்கிருந்து மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம், அதன் பின்பு மீண்டும் ஐஎன்எஸ் அடையார் வழியாக சென்னை பழைய விமான நிலையம். பின்பு அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக பல்லாவரத்தில் பிரதமர் விழா நடக்க இருக்கும் கிரிக்கெட் மைதானம் வருகிறது. அதன் பின்பு அங்கிருந்து மீண்டும் சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்து ஒத்திகை நிகழ்ச்சி நிறைவடைகிறது.

இதையும் படிங்க: Today Rasipalan : இன்றைக்கு நாள் எப்படி! ஒரு ரவுண்டு பார்த்திடலாமா!

தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வருவதை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் பயணமாக இன்று தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள பேகம்பட் விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் மாலை 2:45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அதைத் தொடர்ந்து சென்னை பழைய விமான நிலையத்தில் பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதன் பின்பு பிரதமர் சென்னை புதிய விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம், பல்லாவரம் ஆல்ஸ்ட்ராம் கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் நடக்கும் 4 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு, பின்னர் இன்று இரவு 7:45 மணிக்கு தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் மைசூர் சென்று, இரவு தங்குகிறார். மறுநாள் காலை மைசூரில் இருந்து ஹெலிகாப்டரில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு செல்கிறார். அதன் பின்பு மீண்டும் ஹெலிகாப்டரில் மைசூர் செல்கிறார்.

இதைப்போல் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் தமிழ்நாடு வருவதையொட்டி, டெல்லியில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட எஸ்பிஜி வீரர்கள் சென்னை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர் சென்னை மற்றும் புறநகரில் 5 மணி நேரம் காரில், ஹெலிகாப்டரில் பறந்தபடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு இரவு 7:45 மணிக்கு தனி விமானத்தில், கர்நாடக மாநிலம் மைசூர் சென்று விடுகிறார்.

இதற்காக சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா கடற்கரை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20,000ற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பிரதமர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனைத்து இடங்களும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் சென்னை வருகையை ஒட்டி நேற்று எஸ்பிஜி போலீசார் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர். அதாவது சென்னை பழைய விமான நிலையம் கேட் எண் 6 வழியாக புறப்படும் கான்வாய் கார்களின் அணிவகுப்பு திறப்பு விழா நடக்க இருக்கும். சென்னை புதிய ஒருங்கிணைந்த விமான நிலையம் சென்று விட்டு அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக ஐஎன்எஸ் அடையாறு, சென்ட்ரல் ரயில் நிலையம் செல்கிறது.

அதன் பின்பு அங்கிருந்து மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம், அதன் பின்பு மீண்டும் ஐஎன்எஸ் அடையார் வழியாக சென்னை பழைய விமான நிலையம். பின்பு அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக பல்லாவரத்தில் பிரதமர் விழா நடக்க இருக்கும் கிரிக்கெட் மைதானம் வருகிறது. அதன் பின்பு அங்கிருந்து மீண்டும் சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்து ஒத்திகை நிகழ்ச்சி நிறைவடைகிறது.

இதையும் படிங்க: Today Rasipalan : இன்றைக்கு நாள் எப்படி! ஒரு ரவுண்டு பார்த்திடலாமா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.