ETV Bharat / state

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் - TOP 10 NEWS @ 1 PM

author img

By

Published : May 16, 2021, 1:08 PM IST

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்...

மதியம் 1 மணி செய்தி சுருக்கம்
மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

ஆக்ஸிஜன் உற்பத்தியை பெருக்க வேண்டும்: எம்.எல்.ஏ. ஈவேரா வேண்டுகோள்!

ஈரோடு: ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் உற்பத்தியைப் பெருக்கும் படி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவேரா கேட்டுக்கொண்டார்.

ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் - நஞ்சாக மாறுகிறதா குடிநீர்?

வையாவூர் ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாய நிலை உள்ளது

ஊரடங்கு வரை ஆலையை மூடு - டிஎன்பிஎல் தொழிலாளர்கள் போராட்டம்!

தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையை ஊரடங்கு காலம் வரை மூட வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

கரூரில் 3 லட்சம் அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்!

கரூர்: மாவட்டத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 62.30 கோடி மதிப்பிலான கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்கள் வாகனங்கள் பறிமுதல்!

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்களின் இரு, நான்கு சக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்ததோடு, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

நாட்டை மீட்டெடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்!

இந்தியாவின் தினசரி கோவிட் இறப்பு விகிதம் 4 ஆயிரத்துக்கு குறையவில்லை. இந்த அச்சமூட்டும் சூழ்நிலையில், 10 விழுக்காட்டிற்கும் அதிகமான பாதிப்புகள் உள்ள 530 மாவட்டங்களில், 8 வார ஊரடங்கை அமல்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

'பொது மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கரோனாவை ஒழிக்கலாம்' அமைச்சர் ராஜகண்ணப்பன்!

உங்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என, பொது மக்களிடம் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

சாலையில் கரோனா சடலம்: பொய்யான செய்தியை பதிவிட்ட நபருக்கு போலீஸ் வலை!

கன்னியாகுமரி: ’கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் சடலத்தை சாலையில் வீசி சென்ற அவலம்’ என்ற செய்தியை முகநூலில் பதிவிட்டு காவல் துறையினருக்குப் போக்கு காட்டிய அடையாளம் தெரியத நபரை சைபர் கிரைம் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மலையாள பிக்பாஸ் செட்டில் ஆறு பேருக்கு கரோனா: படப்பிடிப்பு நிறுத்தம்

பூந்தமல்லி அருகே நடைபெற்று வந்த மலையாள பிக்பாஸ் செட்டில் ஆறு பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு பிக்பாஸ் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 18 பேர் உயிரிழப்பு

நாமக்கல்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 18 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ஸிஜன் உற்பத்தியை பெருக்க வேண்டும்: எம்.எல்.ஏ. ஈவேரா வேண்டுகோள்!

ஈரோடு: ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் உற்பத்தியைப் பெருக்கும் படி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவேரா கேட்டுக்கொண்டார்.

ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் - நஞ்சாக மாறுகிறதா குடிநீர்?

வையாவூர் ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாய நிலை உள்ளது

ஊரடங்கு வரை ஆலையை மூடு - டிஎன்பிஎல் தொழிலாளர்கள் போராட்டம்!

தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையை ஊரடங்கு காலம் வரை மூட வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

கரூரில் 3 லட்சம் அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்!

கரூர்: மாவட்டத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 62.30 கோடி மதிப்பிலான கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்கள் வாகனங்கள் பறிமுதல்!

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்களின் இரு, நான்கு சக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்ததோடு, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

நாட்டை மீட்டெடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்!

இந்தியாவின் தினசரி கோவிட் இறப்பு விகிதம் 4 ஆயிரத்துக்கு குறையவில்லை. இந்த அச்சமூட்டும் சூழ்நிலையில், 10 விழுக்காட்டிற்கும் அதிகமான பாதிப்புகள் உள்ள 530 மாவட்டங்களில், 8 வார ஊரடங்கை அமல்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

'பொது மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கரோனாவை ஒழிக்கலாம்' அமைச்சர் ராஜகண்ணப்பன்!

உங்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என, பொது மக்களிடம் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

சாலையில் கரோனா சடலம்: பொய்யான செய்தியை பதிவிட்ட நபருக்கு போலீஸ் வலை!

கன்னியாகுமரி: ’கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் சடலத்தை சாலையில் வீசி சென்ற அவலம்’ என்ற செய்தியை முகநூலில் பதிவிட்டு காவல் துறையினருக்குப் போக்கு காட்டிய அடையாளம் தெரியத நபரை சைபர் கிரைம் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மலையாள பிக்பாஸ் செட்டில் ஆறு பேருக்கு கரோனா: படப்பிடிப்பு நிறுத்தம்

பூந்தமல்லி அருகே நடைபெற்று வந்த மலையாள பிக்பாஸ் செட்டில் ஆறு பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு பிக்பாஸ் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 18 பேர் உயிரிழப்பு

நாமக்கல்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 18 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.