ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் ஜனவரி மாதம் வேலைவாய்ப்பு முகாம்!

author img

By

Published : Dec 29, 2020, 5:29 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஜனவரி மாதம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்
தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் சமுதாயக் கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி சென்னையில் இன்று (டிச.29) நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி தெரிவித்ததாவது, "அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 91 திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் கற்றல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்

தற்போது வரை சுமார் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு 10 ஆயிரம் மாணவர்கள் சேருவார்கள் என எதிர்பார்க்கிறோம். திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களின் விவரங்களை பல்கலைக்கழக மானியக் குழுவின் இணையதளத்தில் ஆதார் எண்ணுடன் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, டிசம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர், அவர்களுடைய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

கடந்தாண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றனர். கரோனா வைரஸ் தொற்று தற்பொழுது குறைந்து வருவதால் அரசின் வழிகாட்டுதல்களைப் பெற்று ஜனவரி மாதம் எட்டு மண்டலங்களிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.

இதன் மூலம் அதிகமான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள். திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு கரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. தற்பொழுதும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடைபெற்று வருகின்றன. அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் அடுத்த ஆண்டு தேர்வு எவ்வாறு நடத்தப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் சமுதாயக் கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி சென்னையில் இன்று (டிச.29) நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி தெரிவித்ததாவது, "அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 91 திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் கற்றல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்

தற்போது வரை சுமார் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு 10 ஆயிரம் மாணவர்கள் சேருவார்கள் என எதிர்பார்க்கிறோம். திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களின் விவரங்களை பல்கலைக்கழக மானியக் குழுவின் இணையதளத்தில் ஆதார் எண்ணுடன் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, டிசம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர், அவர்களுடைய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

கடந்தாண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றனர். கரோனா வைரஸ் தொற்று தற்பொழுது குறைந்து வருவதால் அரசின் வழிகாட்டுதல்களைப் பெற்று ஜனவரி மாதம் எட்டு மண்டலங்களிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.

இதன் மூலம் அதிகமான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள். திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு கரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. தற்பொழுதும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடைபெற்று வருகின்றன. அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் அடுத்த ஆண்டு தேர்வு எவ்வாறு நடத்தப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.