ETV Bharat / state

முன்னாள் டிஜிபி மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 2:16 PM IST

Edappadi Palaniswami: முன்னாள் டிஜிபி மீது சைபர் கிரைம் காவல்துறை பதிந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் டிஜிபி மீதான வழக்கை திரும்ப பெற வேண்டி எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
முன்னாள் டிஜிபி மீதான வழக்கை திரும்ப பெற வேண்டி எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: நேற்று சென்னை காமராஜர் அரங்கில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் காவல் துறை அதிகாரி தன் மீது அவதூறான கருத்து பரப்புவதாகவும், அவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அதன்படி, திருச்சி மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஷீலா, முன்னாள் டி.ஜி.பியும், மயிலாப்பூர் தொகுதியின் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.நடராஜ்-க்கு எதிராக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்திருந்தார். அப்புகாரின் அடிப்படையில், திருச்சி சைபர் கிரைம் காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.நடராஜ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

  • ஆட்சியில் இல்லாதபோது பேச்சுரிமை, எழுத்துரிமை என்று ஓலமிட்ட இந்த விடியா அரசின் ஷூட்டிங் முதலமைச்சர் @mkstalin ஜனநாயக ரீதியில், தமிழக மக்கள் படும் துயரங்களை எடுத்துச் சொல்வோரின் குரல்வளையை நெறிக்கும் வேலையில் இறங்கியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    தி.மு.க. ஆட்சியாளர்களின்…

    — Edappadi K Palaniswami (@EPSTamilNadu) November 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதற்கு, அதிமுகவின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “ஆட்சியில் இல்லாதபோது பேச்சுரிமை, எழுத்துரிமை என்று ஓலமிட்ட இந்த விடியா அரசின் ஷூட்டிங் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனநாயக ரீதியில் தமிழக மக்கள் படும் துயரங்களை எடுத்துச் சொல்வோரின் குரல்வளையை நெறிக்கும் வேலையில் இறங்கியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இதையும் படிங்க: “பக்தி இல்லை, பகல் வேஷம் போடுகின்றனர்” - நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!

திமுக ஆட்சியாளர்களின் அதிகார மமதை, அடாவடித்தனங்களைத் தோலுரித்துக் காட்டும் நமது ஐடி விங் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஒரு சில தொலைக்காட்சிகள் மீது பொய் வழக்குகள் புனைவதும், கடந்த 30 மாத திமுக ஆட்சி குறித்தும், முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரையிலானவர்களின் நடவடிக்கைகள் குறித்தும், சமூக வலைத்தளங்களில் வந்த செய்திகளைப் பிரதிபலித்த காவல்துறை முன்னாள் தலைவரும், தமிழ்நாடு தேர்வாணையக் குழு முன்னாள் தலைவரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.நடராஜ் மீது, பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பது, இந்த விடியா திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கையும், சகிப்புத் தன்மையற்ற மனநிலையையுமே எடுத்துக் காட்டுகிறது.

காவல்துறை முன்னாள் தலைவர் மற்றும் தனியார் செய்தி தொலைக்காட்சி மீது புனையப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்" எனக் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் குறித்து அவதூறு பதிவு - முன்னாள் டிஜிபி நடராஜ் மீது வழக்குப்பதிவு!

சென்னை: நேற்று சென்னை காமராஜர் அரங்கில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் காவல் துறை அதிகாரி தன் மீது அவதூறான கருத்து பரப்புவதாகவும், அவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அதன்படி, திருச்சி மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஷீலா, முன்னாள் டி.ஜி.பியும், மயிலாப்பூர் தொகுதியின் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.நடராஜ்-க்கு எதிராக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்திருந்தார். அப்புகாரின் அடிப்படையில், திருச்சி சைபர் கிரைம் காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.நடராஜ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

  • ஆட்சியில் இல்லாதபோது பேச்சுரிமை, எழுத்துரிமை என்று ஓலமிட்ட இந்த விடியா அரசின் ஷூட்டிங் முதலமைச்சர் @mkstalin ஜனநாயக ரீதியில், தமிழக மக்கள் படும் துயரங்களை எடுத்துச் சொல்வோரின் குரல்வளையை நெறிக்கும் வேலையில் இறங்கியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    தி.மு.க. ஆட்சியாளர்களின்…

    — Edappadi K Palaniswami (@EPSTamilNadu) November 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதற்கு, அதிமுகவின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “ஆட்சியில் இல்லாதபோது பேச்சுரிமை, எழுத்துரிமை என்று ஓலமிட்ட இந்த விடியா அரசின் ஷூட்டிங் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனநாயக ரீதியில் தமிழக மக்கள் படும் துயரங்களை எடுத்துச் சொல்வோரின் குரல்வளையை நெறிக்கும் வேலையில் இறங்கியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இதையும் படிங்க: “பக்தி இல்லை, பகல் வேஷம் போடுகின்றனர்” - நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!

திமுக ஆட்சியாளர்களின் அதிகார மமதை, அடாவடித்தனங்களைத் தோலுரித்துக் காட்டும் நமது ஐடி விங் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஒரு சில தொலைக்காட்சிகள் மீது பொய் வழக்குகள் புனைவதும், கடந்த 30 மாத திமுக ஆட்சி குறித்தும், முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரையிலானவர்களின் நடவடிக்கைகள் குறித்தும், சமூக வலைத்தளங்களில் வந்த செய்திகளைப் பிரதிபலித்த காவல்துறை முன்னாள் தலைவரும், தமிழ்நாடு தேர்வாணையக் குழு முன்னாள் தலைவரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.நடராஜ் மீது, பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பது, இந்த விடியா திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கையும், சகிப்புத் தன்மையற்ற மனநிலையையுமே எடுத்துக் காட்டுகிறது.

காவல்துறை முன்னாள் தலைவர் மற்றும் தனியார் செய்தி தொலைக்காட்சி மீது புனையப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்" எனக் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் குறித்து அவதூறு பதிவு - முன்னாள் டிஜிபி நடராஜ் மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.