ETV Bharat / state

ஏப்ரல் 7ஆம் தேதி அதிமுகவின் செயற்குழு கூட்டம்: என்னென்ன முடிவுகள் எடுக்க வாய்ப்பு? - ஓபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் செய்ற்குழு கூட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் வருகின்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியில் பல முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Edappadi Palaniswami announced AIADMK executive committee meeting on April 7 important decisions to be taken in the meeting
ஏப்ரல் 7 ஆம் தேதி அதிமுகவின் செயற்குழு கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள நிலையில், செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது
author img

By

Published : Apr 4, 2023, 7:16 AM IST

சென்னை: ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் வியூகங்களை தோற்கடித்து ஈபிஎஸ் முதல் படியை ஏறியுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றமும், தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்ட நகர்வாக பல செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளார். ஏற்கனவே பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் தரப்பினர் சமர்ப்பித்துள்ளனர்.

அதிமுகவின் புதிய உறுப்பினர் அட்டைக்கான விண்ணப்ப படிவம் வருகின்ற ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்ட இருக்கிறது. ஏப்ரல் 7 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் தலைமை கழக செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதே ஏப்ரல் 7ஆம் தேதி மதியம் 12 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதில், செயற்குழு உறுப்பினர்களாக உள்ள தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக உள்ள மகளிர் மட்டும் என இந்த நிர்வாகிகள் மட்டும் தவறாமல் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி(Edappadi Palaniswami) அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவியேற்று முதல் செயற்குழு கூட்டம் என்பதால் சில முக்கியமான முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளன. அதிமுகவை பொறுத்தவரையில் ஆண்டிற்கு இரண்டு செயற்குழு, இரண்டு பொதுக்குழு கூட்டப்படும். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் செயற்குழுவாக இது அமைந்துள்ளது.

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தீர்மானமாக செயற்குழுவில் அங்கீகாரம் பெற முடிவு எடுத்துள்ளனர். பின்னர் பொதுக்குழுவில் வைத்து தீர்மானமாக நிறைவேற்றி இந்திய தேர்தல் ஆணையத்திலும் சமர்ப்பிக்க உள்ளனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல், அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் சமீப காலமாக ஏற்பட்டு வரும் கருத்து மோதல்கள் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து செயற்குழுவில் விவாதிக்க வாய்ப்புள்ளது.

மேலும் கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும் இலக்கு நிர்ணயிக்கவும், தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பல்வேறு சட்ட போராட்டங்களையும், விமர்சனங்களையும் கடந்து வந்துள்ள எடப்பாடி பழனிசாமி தன்னை வலிமையான தலைவராக நிரூபிப்பதற்காக அடுத்தடுத்த நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: கட்சியை துரோகத்தில் இருந்து காப்பாற்றிய கலங்கரை விளக்கம் EPS - ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

சென்னை: ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் வியூகங்களை தோற்கடித்து ஈபிஎஸ் முதல் படியை ஏறியுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றமும், தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்ட நகர்வாக பல செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளார். ஏற்கனவே பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் தரப்பினர் சமர்ப்பித்துள்ளனர்.

அதிமுகவின் புதிய உறுப்பினர் அட்டைக்கான விண்ணப்ப படிவம் வருகின்ற ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்ட இருக்கிறது. ஏப்ரல் 7 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் தலைமை கழக செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதே ஏப்ரல் 7ஆம் தேதி மதியம் 12 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதில், செயற்குழு உறுப்பினர்களாக உள்ள தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக உள்ள மகளிர் மட்டும் என இந்த நிர்வாகிகள் மட்டும் தவறாமல் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி(Edappadi Palaniswami) அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவியேற்று முதல் செயற்குழு கூட்டம் என்பதால் சில முக்கியமான முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளன. அதிமுகவை பொறுத்தவரையில் ஆண்டிற்கு இரண்டு செயற்குழு, இரண்டு பொதுக்குழு கூட்டப்படும். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் செயற்குழுவாக இது அமைந்துள்ளது.

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தீர்மானமாக செயற்குழுவில் அங்கீகாரம் பெற முடிவு எடுத்துள்ளனர். பின்னர் பொதுக்குழுவில் வைத்து தீர்மானமாக நிறைவேற்றி இந்திய தேர்தல் ஆணையத்திலும் சமர்ப்பிக்க உள்ளனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல், அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் சமீப காலமாக ஏற்பட்டு வரும் கருத்து மோதல்கள் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து செயற்குழுவில் விவாதிக்க வாய்ப்புள்ளது.

மேலும் கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும் இலக்கு நிர்ணயிக்கவும், தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பல்வேறு சட்ட போராட்டங்களையும், விமர்சனங்களையும் கடந்து வந்துள்ள எடப்பாடி பழனிசாமி தன்னை வலிமையான தலைவராக நிரூபிப்பதற்காக அடுத்தடுத்த நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: கட்சியை துரோகத்தில் இருந்து காப்பாற்றிய கலங்கரை விளக்கம் EPS - ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.