சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தும் மருத்துவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல் துறை கைது செய்ய வேண்டும் என காவல் ஆணையருக்கு இணையம் மூலம் சமூக ஆர்வலர் தேவராஜன் புகார் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள், மாணவர்கள் ஊதிய உயர்வு, அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதனால், நோயாளிகளின் சிகிச்சை கேள்விக்குறியாகியுள்ளதாகவும், இந்த போராட்டத்தின் பின்னணியில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதா என்பதை காவல் துறை ஆராய வேண்டும் எனவும் அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: போக்குவரத்துப் புலனாய்வு காவல் துறையினருக்கு எதிராக புகார் மனு